December 5, 2025, 10:24 AM
26.3 C
Chennai

தில்லியில.. டிராக்டர் டிரைவருக்கு அபராதம்… அம்மாடியோவ்… ரூ.59 ஆயிரம்!

tractor driver fined 59k - 2025

புதிய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு அபராதம் குறித்த தகவல்கள் அதிகம் வெளியாகி வருகின்றன.

சாலை போக்குவரத்து விதிகளை மீறிய டிராக்டர் ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில் தில்லி போலீசார் 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்த வழிவகுக்கும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்தம் இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் கடுமையான அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மது அருந்தி முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுனருக்கு 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

police fined1 - 2025

ஹரியானா மாநிலம் குர்கானில் ஹெல்மெட் அணியாதது முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறலில் ஈடுபட்ட இரு சக்கர வாகன ஓட்டுனருக்கு போலீசார் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் தில்லியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ராம் கோபால் என்ற டிராக்டர் ஓட்டுநர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தனர்.

ஓட்டுநர் உரிமம் காப்பீடு வாகன பதிவு மற்றும் தகுதி சான்று இல்லாதது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களை ஏற்றிச் செல்வது போக்குவரத்து விதிகளை மீறியது என 10 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

police fined - 2025

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் விதி மீறலில் ஈடுபட்டால் பொதுமக்களிடம் வசூலிப்பதை போல இரண்டு மடங்கு அபராத தொகை வசூலிக்கப்படும் என்று தில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய சட்டத் திருத்தம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது இந்த புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை மற்ற மாநிலங்கள் எப்படி நடைமுறை படுத்துகின்றன என்பதை கவனித்து வருகிறோம்; தில்லி அரசு அதை இன்னும் அமல்படுத்தவில்லை என்றார்.

ஆனால், முதல்வரின் கருத்துக்கு மாறாக தில்லி போலீசார் ஒரு டிராக்டர் டிரைவரிடம் 59 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories