பாக். சிறுபான்மை பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றம்; அரசியல் தலைவா்கள் உடந்தை என சிந்து அமைப்பு புகார்!

IND PAK 2 - 2026

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மை சமுதாயங்களாக வாழும் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ, இளம் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து ஐ.நா. பொது சபை கூட்டத்தின் போது போராட்டம் நடத்த சிந்து அமைப்பு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் போது பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து, சீக்கிய, கிறிஸ்தவ இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்த அமெரிக்காவைச் சேர்ந்த சிந்து அமைப்பு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் இளம் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து இந்த அமைப்பு பல முறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு இது சம்பந்தமாக குற்றச்செயலில் ஈடுபட்டோர் மீது இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில்

ஐக்கிய நாடுகள் பொது சபையில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இம்ரான்கானுக்கு எதிராக போராட்டத்தை நடத்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது குறித்து சிந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 12 முதல் 28 வயதுக்குட்பட்ட சுமார் 1000 பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய திருமணம் செய்யப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள தகவலின்படி 2004 ஜனவரி மாதத்திலிருந்து 2018 மே மாதம் வரை, மொத்தம் 7430 சிந்தி இந்து பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.

அரசியல் தலைவர்களின் உதவியோடு இத்தகைய கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பல வழக்குகள் பதியப்படாமல் விடப்பட்டுள்ளதாகவும் சிந்து அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories