December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

பச்ச பச்சயா பேசிய பஞ்ச் அமைச்சர்…! அவர்தான் ட்ரெண்ட் நாயகன் கேடி ரா.பா..!

rajendra balaji admk minister - 2025

பச்சையா சொல்றதுக்கு பெயர் தான் பச்சை அறிக்கை!!

இப்படி ஒரு விளக்கத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அதுவும் அமைச்சர் ஒருவர் கூறுவதை கேட்கும்போது, தமிழர்களாகிய நமக்குப் புல்லரிக்கவே செய்கிறது.

தமிழக அரசியலில் ஜெயலலிதாவுக்குப் பின்னர் அடக்கியாளும் திறமை இல்லாது போய்விட்டதாய்க் கூறப்படுவதுண்டு. கருணாநிதிக்குப் பின்னர் பிறரை காயப் படுத்திப் பேசும் தேர்ந்த குயுக்தி நிறைந்த சொற்களைக் கையாள்பார் எவருமில்லாமல் போய்விட்டனர் என்று சொல்வதும் உண்டு.

தற்போதைய சூழலில் மக்களுக்கான எதிர்காலத்தின் தேய்மான அரசியலை பிறை பார்த்து மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் தத்துப் பித்தென்று தமிழே ததிங்கினதாம் போடுவதாய் உளறிக் கொட்டி, சொல்வாயில்புகா செல்வராய் சென்றுகொண்டிருக்கிறார்.

தமிழக ஆளும் அரசியல்வாதிகள் தரப்பில், அடிக்கடி செய்திகளில் முகம் காட்டும் அமைச்சர் ஜெயக்குமார், ஏதோ தன் பங்குக்கு ஜோக்கர் என்று ஸ்டாலின் வாயால் பெயர் வாங்கி, தன்னைத்தானே அவ்வாறு அழைத்துக் கொண்டு ஜோக்கராகவே ஆகிவிட்டார்.

முதலமைச்சரோ ஏதோ வாய் திறந்தாலும், அது அவ்வளவாக சமூகத்தில் எதிரொலிப்பதில்லை! அவரது சொல்வீச்சும் மக்களிடம் கவனம் பெறுவதாய் அமைவதில்லை. துணை முதலமைச்சரோ, சமாதித் தியானத்தில் முளைத்தெழுந்தார். தொடர்ந்து தியானம் செய்வதில் மட்டுமே வல்லவராகிப் போனார்.

இந்நிலையில் எதிர்த்தரப்புக்கு அடிகொடுக்கும் சிம்ம கர்ஜனை செய்பவாய், நரித்தனத்தை வெளிப்படுத்தும் நயம் கொண்டவாய் திகழ்கிறார் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,

அண்மையில் அவர் சொன்ன வெள்ளையறிக்கைல்லாம் முடியாது… வெள்ளரிக்காய வேணா தாரோம்.. என்ற வாசகங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அப்படியும் அசராமல் திமுக., தலைவர் சுடாலினுக்கு பதில் கொடுத்து வருகிறார் கேடி ராஜேந்திரபாலாஜி.

இப்போதைய அவர் அறிக்கை வாசகம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.

தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், வெள்ளை அறிக்கை என்னக்க… பச்சை அறிக்கை கூட தாரோம் என்று சொன்னதற்கு, அதென்ன பச்சை அறிக்கை என்று கேட்டதற்கு… பச்சையா சொல்றது பச்சை அறிக்கை என்று போட்டாரோ ஒரு போடு…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories