பச்ச பச்சயா பேசிய பஞ்ச் அமைச்சர்…! அவர்தான் ட்ரெண்ட் நாயகன் கேடி ரா.பா..!

rajendra balaji admk minister - 2026

பச்சையா சொல்றதுக்கு பெயர் தான் பச்சை அறிக்கை!!

இப்படி ஒரு விளக்கத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அதுவும் அமைச்சர் ஒருவர் கூறுவதை கேட்கும்போது, தமிழர்களாகிய நமக்குப் புல்லரிக்கவே செய்கிறது.

தமிழக அரசியலில் ஜெயலலிதாவுக்குப் பின்னர் அடக்கியாளும் திறமை இல்லாது போய்விட்டதாய்க் கூறப்படுவதுண்டு. கருணாநிதிக்குப் பின்னர் பிறரை காயப் படுத்திப் பேசும் தேர்ந்த குயுக்தி நிறைந்த சொற்களைக் கையாள்பார் எவருமில்லாமல் போய்விட்டனர் என்று சொல்வதும் உண்டு.

தற்போதைய சூழலில் மக்களுக்கான எதிர்காலத்தின் தேய்மான அரசியலை பிறை பார்த்து மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் தத்துப் பித்தென்று தமிழே ததிங்கினதாம் போடுவதாய் உளறிக் கொட்டி, சொல்வாயில்புகா செல்வராய் சென்றுகொண்டிருக்கிறார்.

தமிழக ஆளும் அரசியல்வாதிகள் தரப்பில், அடிக்கடி செய்திகளில் முகம் காட்டும் அமைச்சர் ஜெயக்குமார், ஏதோ தன் பங்குக்கு ஜோக்கர் என்று ஸ்டாலின் வாயால் பெயர் வாங்கி, தன்னைத்தானே அவ்வாறு அழைத்துக் கொண்டு ஜோக்கராகவே ஆகிவிட்டார்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

முதலமைச்சரோ ஏதோ வாய் திறந்தாலும், அது அவ்வளவாக சமூகத்தில் எதிரொலிப்பதில்லை! அவரது சொல்வீச்சும் மக்களிடம் கவனம் பெறுவதாய் அமைவதில்லை. துணை முதலமைச்சரோ, சமாதித் தியானத்தில் முளைத்தெழுந்தார். தொடர்ந்து தியானம் செய்வதில் மட்டுமே வல்லவராகிப் போனார்.

இந்நிலையில் எதிர்த்தரப்புக்கு அடிகொடுக்கும் சிம்ம கர்ஜனை செய்பவாய், நரித்தனத்தை வெளிப்படுத்தும் நயம் கொண்டவாய் திகழ்கிறார் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,

அண்மையில் அவர் சொன்ன வெள்ளையறிக்கைல்லாம் முடியாது… வெள்ளரிக்காய வேணா தாரோம்.. என்ற வாசகங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அப்படியும் அசராமல் திமுக., தலைவர் சுடாலினுக்கு பதில் கொடுத்து வருகிறார் கேடி ராஜேந்திரபாலாஜி.

இப்போதைய அவர் அறிக்கை வாசகம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.

தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், வெள்ளை அறிக்கை என்னக்க… பச்சை அறிக்கை கூட தாரோம் என்று சொன்னதற்கு, அதென்ன பச்சை அறிக்கை என்று கேட்டதற்கு… பச்சையா சொல்றது பச்சை அறிக்கை என்று போட்டாரோ ஒரு போடு…!

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories