அளவுக்கு மிஞ்சி ஆளை ஏற்றி கவுந்த கார்! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

car 2 - 2026

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கார் விருதுநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சாத்தூரில் இருந்து சிவகாசி வரை கார் ஒன்று சென்றது. அப்போது அந்த கார் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வளைவில் அதிவேகமாக திரும்பிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் மற்றும் 16 வயதுடைய சிறுவன் இருவரும் உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற கார்த்திக்ராஜா என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். பத்து பேருக்கும் குறைவாகவே ஏற்றி செல்லும் வாகனத்தில் 3 சிறுவர்கள் 12 பெரியவர்கள் என மொத்தம் 15 பேரை ஏற்றிச் சென்றது மற்றும் மிதமான வேகத்தில் செல்லக்கூடிய வளைவில் அதிவேகமாக சென்றது என இந்த இரண்டு காரணங்களால் தான் இத்தகைய விபத்து நேரிட்டுள்ளது என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தினால் 3 பேர் உயிர் இழந்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கின்றனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றினால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது என்பது குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories