December 5, 2025, 9:17 PM
26.6 C
Chennai

மதுக்கடையை திற..! ஆண்கள் ஆர்ப்பாட்டம்; திறக்காதே பெண்கள் போராட்டம்..! குழப்பத்தில் அதிகாரிகள்.?

TAS MAK - 2025

திருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்; திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் என பெண்கள் அறிவிப்பு

திருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

TAS MAK 3 - 2025

திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம் என பெண்கள் அறிவித்தனர்.

மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் கடந்த 12-ந்தேதி டாஸ்மாக் கடை ஒன்று கோலாகலமாக திறக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பெருமாம்பாளையத்தை சேர்ந்த பெண்கள், மற்றும் அக்கம், பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

TAS MAK 4 - 2025

பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் மங்கலம் போலீசார் மற்றும் டாஸ்மாக் மண்டல அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் மண்டல அதிகாரியிடம் பெருமாம்பாளையம் குடியிருப்புக்கு மிக அருகே.இந்த டாஸ்மாக் கடை உள்ளது.

மேலும் பெருமாம்பாளையம் பகுதியில் இருந்து மலைக்கோவில் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும்.

TAS MAK 5 - 2025

எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் மண்டல அதிகாரி,டாஸ்மாக் கடை மூடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுக்கடை செயல்படவில்லை.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் மது குடிக்க வந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருப்பதை பார்த்து மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

TAS MAK 7 - 2025

இந்த நிலையில் நேற்றும் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

இதனால் நேற்று மதியம் 3 மணிக்கு சாமளாபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

அப்போது அவர்கள் வேண்டும், வேண்டும் அரசு மதுபானக் கடை வேண்டும் “என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுப்பிரியர்கள் போலீசாரிடம் கூறுகையில் “மது வாங்குவதற்கு பஸ் மூலமாக நீண்ட தூரம் சென்று மது வாங்கி வருகிறோம், ஆகவே எங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என கூறினர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் மதுப்பிரியர்களிடம்” சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று மனு கொடுங்கள் “என கூறினர்.

பின்னர் மதுப்பிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

TAS MAK 5 1 - 2025

இந்த சம்பவம் குறித்து பெருமாம்பாளையம் பெண்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம்.

ஆனால் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஒரு சிலர் பெருமாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுப்பிரியர்களை ஆட்டோ மூலம் வரவழைத்து டாஸ்மாக் கடை முன்பு மதுக்கடை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மதுப்பிரியர்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறந்தால் நாங்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories