ஹாங்கி எல் 5 சொகுசு கார் சீன அதிபருக்காக சென்னை வந்தது!

china car 1 - 2026

நாளை 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கியிருந்து இருநாட்டு உறவு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. நகரம் முழுக்க காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

747 சரக்கு விமானம் மூலமாக சீனாவிலிருந்து நேற்று இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன ஹாங்கி எல் 5 ரகத்தைச் சோந்த நான்கு கார்கள் வந்து இறங்கியுள்ளன.

சாட்டிலைட் செல்லிடப்பேசி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் மற்றும் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள் சீன அதிபரின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

china car - 2026

நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் ஜி ஜின்பிங். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு மிகுந்த காரில், ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வார்.” என்ற சீன ஹாங்கி நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடம்பர காரை சீன அதிபர் பயன்படுத்தி வருகிறார்.

இந்த கார் புறப்பட்ட வெறும் 8 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை தொடக் கூடியது. 18 அடி நீளமும், 6.5 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட இந்த காரின் எடை 3152 கிலோ. ஹாங்கி எல் 5 ரகத்தைச் சோந்த காரில் 105 லிட்டர் பெட்ரோல் அல்லது எரிவாயு நிரப்பிக்கொள்ளலாம். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் 500 மைல்கள் வரை பயணிக்க முடியும். ‘ஹாங்கி எல்-5’ ரக கார் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த காராகும். இதன் விலை 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ.5.60 கோடி).

இந்த கார் வந்த விமானத்திலேயே ஷி ஜின்பிங்குக்கு பாதுகாப்பு வழங்கும் சீன ராணுவத்தின் பாதுகாப்பு பிரிவைச் சோந்த அதிகாரிகளும் வந்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories