லைசன்ஸ் வாங்க சென்ற பெண்! ஆடை விஷயத்தில் ஆலோசனை தந்த அதிகாரி!

rto 1 - 2026

சென்னை கே.கே.நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குப் பெண் ஒருவர் லைசென்ஸ் பெறுவதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண், ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து சென்றுள்ளார். அப்போது, `இதுபோன்ற உடையுடன் வண்டியை ஓட்டி தேர்வில் ஈடுபடக் கூடாது. சல்வார் கமீஸ் உடை அணிந்துவாருங்கள்’ என அந்தப் பெண்ணிடம் அதிகாரிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் தன் வீட்டுக்குச்சென்று உடைமாற்றி வந்த பின், வண்டியை ஓட்டி மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக, பெண்கள் ஜீன்ஸ் உடையுடன் வந்தால், வாகனத்துக்கு லைசென்ஸ் பெறுவதற்கான சோதனைக்கு அனுமதியில்லை என்று தகவல் பரவத்தொடங்கியது.

சென்னையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. இந்த நிலையில், இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “லைசென்ஸ் பெறுவதற்கான இருசக்கர வாகன சோதனைக்கு எந்தவித ஆடைக்கட்டுப்பாடும் இல்லை. அப்படி எந்தவோர் அறிவிப்பும் இல்லை. ஆனால், ஒரு பரிசோதனைக்கு வருவதற்கு முன்பு ஆண்களும் பெண்களும் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது. நீளமான துப்பட்டாவோ அல்லது புடவை அணிந்து வாகனம் ஓட்டும்போது, அது சிக்கலைத்தரும். அவர்களின் நலனுக்காகத்தான் இதைக்கூறுகிறோம்” என்றார்.

மற்றொருவர் கூறுகையில், “இது ஒரு தவறான புரிதல்தான். ஆண்களும் பெண்களும் கண்ணியமான மற்றும் இடையூறில்லாத உடையில் வர வேண்டும் என்பது எங்களுடைய பரிந்துரை மட்டுமே. மற்றபடி இது ஒரு விதி அல்லது உத்தரவு என எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஓட்டுநர் பள்ளிகளில்கூட இந்தமாதிரியான ஆடைகளை அணிந்துவர வேண்டும் என்று அவர்கள் கூறுவதுண்டு.

ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல. இதேபோல 6 மாதங்களுக்கு முன் மற்றொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த பெண்ணிடம், “இருசக்கர வாகனங்களைப் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு ஏற்றவாறு ஆடை அணியும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆண்களும் ஷார்ட்ஸ் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். பெண்களும் அவர்களுக்குப் பாதுகாப்பான வசதியான, கண்ணியமான ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும்” என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories