காலத்தில் கர்ப்பிணிக்கு உதவி! காப்பாற்றப்பட்ட 2 உயிர்! மலேசியாவில் தமிழ் பெண்ணுக்கு பாராட்டு!

help 3 - 2026

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய இந்திய வம்சாவளி பெண், மலேசியா நாட்டில் கவுரவிக்கபட்டுள்ளது நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்தவர் கோமதி நாராயணன். இவருடைய வயது 27. இவர் தற்போது மலேசியா நாட்டில் காவலராக பணியாற்றி வருகிறார். 7-ஆம் தேதியன்று கோமதி பேருந்து நிலையத்திற்கு அருகே பணியாற்றிக்கொண்டிருந்தார்.

பிற்பகல் 3:45 மணி அளவில் இந்தோனேசியா பெண் ஒருவர் பிரசவ வலியால் பேருந்து நிலையத்திற்கு அருகே துடித்து கொண்டிருந்தார்.

துரதிஷ்டவசமாக அடுத்த சில மணி துளிகளில் அவருடைய பனிக்குடம் உடைந்துள்ளது. இதனால் அந்த பெண் வலியால் மிகவும் சிரமப்பட்டார்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், கோமதி உடனடியாக ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்தார். சிரமப்பட்டு அந்த கர்ப்பிணியை காருக்குள் ஏற்றி அவசர அவசரமாக மருத்துவமனையை நோக்கி சென்றனர்.

மருத்துவமனையை அடையும் முன்னரே கர்ப்பிணிக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தாயையும் குழந்தையையும் பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கர்ப்பிணி பெண்ணை திறமையாக செயல்பட்டு சமயத்தில் காப்பாற்றியதற்காக, கோமதி நாராயணனுக்கும், வாடகைக்கார் ஓட்டுநரான வோங் கோக் லூங்க்கும் மலேசியா அரசாங்கம் பாராட்டு விழா எடுத்தது.

விழாவில் பேசிய மாவட்ட கண்காணிப்பாளரான முகமத் மோக்சின், “இருவரும் நம் நாட்டின் ஹீரோக்கள். கோமதியின் செயல்பாடுகளை பிற காவலர்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்” என்று புகழ்ந்துரைத்தார். பின்னர் இருவருக்கும் நினைவு தகடும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.

அந்த குழந்தைக்கு ரிஸ்கி சரதி மதி-வர்ணா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது மலேசியா நாட்டில் இந்தியர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories