இவரல்லவோ மக்கள் முதல்வர்! தந்தை சமாதியை அகற்ற உத்தரவு!

Published:

naveen patnaik - 2026

என் தந்தையின் சமாதியை அகற்றி விடுங்கள் இன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் சமாதியை நீக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளார் அவரது மகன்.

முதல்வரின் முடிவு வெளிவந்த சில மணிகளுக்குள் உத்தரவு வெளிவந்துவிட்டது.

பிஜுபட்நாயக் சமாதியோடு கூட அவருடைய நினைவாக கட்டிய நினைவு மண்டபத்தையும் இடித்து விடும்படி கூறியுள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்ற பூரி புண்ணிய தலத்தில் பிஜு பட்நாயக் சமாதி உள்ளது. ஸ்வர்கத்வார் என்ற பெயரோடு நினைவு நிலையத்தையும் மயான வளாகத்தையும் அங்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மயானத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர்வாசிகள் கோரி வருகின்றனர்.

பிஜு பட்நாயக் சமாதியும் நினைவு மண்டபமும் அங்கிருப்பதால் அவற்றை இடித்து விரிவுபடுத்துவது சாத்தியமில்லாத செயல் என்றும் இயலாத காரியம் என்றும் அதிகாரிகள் முதல்வருக்கு எடுத்துரைத்தனர்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

அதன் காரணமாக அதிகாரிகளோடு கலந்துரையாடிய முதல்வர் பிரச்சினையின் தீர்வுக்காக எது வேண்டுமானாலும் செய்யத்தானே வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தந்தையின் சமாதியையும் நினைவு மண்டபத்தை இடித்துவிடும் படி உத்தரவிட்டார்.

முதல்வரின் முடிவு குறித்து மாநில அளவில் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img