ஆர்சிஇபி: மோடி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!

Published:

modi 7 - 2026

மோடி பரபரப்பு முடிவு ஆர்சிஇபி க்கு இந்தியா நிராகரிப்பு. ஒப்பந்தத்தில் சேரப் போவதில்லை என்று தீர்மானம்.

இந்தியாவின் நலனோடு சமரசம் செய்து கொள்வதற்கு இடமில்லை என்று முடிவாக கூறிவிட்டார் பிரதமர் .

உலகிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் ரீஜனல் கம்ப்ரிஹென்சிவ் எகனாமிக் பார்ட்னர்ஷிப் (RCEP) ஒப்பந்தத்தில் சேருவதற்கு பாரதம் நிராகரித்துள்ளது.

ஆர்சிஇபி ஒப்பந்தத்தின் அடிப்படை குணம் மாறி விட்டது என்றும் இந்த ஒப்பந்தம் விஷயத்தில் இந்தியா வெளிப்படுத்திய மறுப்புகள் கண்டுகொள்ளப் படவில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அதனால் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது பாரதம்.

இந்தியாவின் நலன் விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட முடிவோடு உள்ளார்.

அதுமட்டுமன்றி ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா தெரிவித்த முக்கிய அம்சங்களைப் பற்றி எதுவும் கூறப் படாததால் இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது.

இந்தியாவிற்குள் சைனாவின் இறக்குமதிகள் வந்து குவிகின்ற பின்னணியில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் பல மறுப்புகளை வெளிப்படுத்தியது. சில புதிய கோரிக்கைகளை எடுத்து நிறுத்தியது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உண்மையில் பாங்காக்கில் நடந்த ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் ஆர்சிஇபி ஒப்பந்தம் முடிவாக வேண்டும்.

ஆனால் இந்தியா ஒப்புக் கொள்ளாததால் இந்த ஒப்பந்தம் 2020 க்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தோன்றுகிறது.

இந்தியாவோடு சேர்ந்து சைனா ஜப்பான் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற 16 நாடுகள் இடையே ஆர்சிஇபி ஒப்பந்தம் நிகழ வேண்டியுள்ளது.

உலகின் பாதி மக்கள் தொகை இந்த நாடுகளிலேயே உள்ளது . ஆர்சிஇபி மீது கையெழுத்திடுவதற்கு மீதி நாடுகள் கட்டுப்பட்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டுமே மறுப்பு தெரிவித்துள்ளது.

சைனாவின் மலிவான பொருட்களின் குவிதலால் சிறு வியாபாரிகளின் நிலைமை அடிபட்டு உள்ளது என்று பிரதமர் மோடி ஏற்கனவே ஆர்சிஇபி ஒப்பந்தத்தின் மீது மறைமுகமாக கவலை தெரிவித்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img