லண்டன்:
பீட்சாவை காதலித்து அதையே ஒரு பெண் திருமணம் செய்த வினோத நிகழ்ச்சி நடந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ‘பீட்சா’ என்றால் கொள்ளை பிரியம். பல வகையான ‘பீட்சா’க்களை சாப்பிட்டு ருசி பார்த்த அவர் அதையே திருமணமும் செய்து கொண்டார். அந்த இளம் பெண்ணின் பெயர் கிறிஸ்டினா வாக்னர் (18).
‘பீட்சா’ மீது அளவுக்கு அதிகமாக பிரியம் கொண்ட கிறிஸ்டினாவுக்கு அதன் மீது காதல் ஏற்பட்டது. எனவே பீட்சாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர் தனது பாட்டியின் திருமண உடையை எடுத்தார். அதனை அணிந்து தன்னை புது மணப்பெண் ஆக்கி கொண்டார். இந்த விவரத்தை தனது நெருங்கிய நண்பரும், புகைப்பட கலைஞருமான மெர்சி ஹாரிசிடம் தெரிவித்தார்.
அவர் கிறிஸ்டினா வீட்டிற்கு விரைந்தார். பின் திருமண உடையுடன் பீட்சாவை கையில் ஏந்தி, அதனைக் கடித்து சுவைத்தபடி போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார். பீட்சாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் அதை கணவராக ஏற்றுக் கொண்டதாகவும் ‘பேஸ்புக்’ கில் தகவல் வெளியிட்டார். அது தொடர்பான போட்டோக்களையும் வெளியிட்டு விநோத அலைகளை ஏற்படுத்திவிட்டார்.