December 6, 2025, 6:41 AM
23.8 C
Chennai

மாவட்ட வாரியாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் துவக்கப்படும் ;டிஜிபி.திரிபாதி அறிவிப்பு.!

dgp 2 - 2025

தமிழகத்தில், மாவட்ட வாரியாக, ‘சைபர் கிரைம்’ காவல் நிலையம் துவங்கப்படும்,” என, டி.ஜி.பி.,திரிபாதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், ‘சைபர் கிரைம்’ எனப்படும், இணைய வழி குற்றங்களை தடுக்கவும், அதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கூடுதல் டி.ஜி.பி., தலைமையில், ‘சைபர் அரங்கம்’ துவங்கப்பட்டுள்ளது.

இதற்கு, 3.70 கோடி ரூபாய், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

இந்நிலையில், தமிழக காவல் துறையும், சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனமும் இணைந்து, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தோருக்கு, ‘ஹேக்கத்தான்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

மேலும், பெருகி வரும் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து, போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், 1,348 பேர் பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடித்த குழுவினரை பாராட்டி, டி.ஜி.பி., திரிபாதி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், டி.ஜி.பி., திரிபாதி பேசியதாவது:தகவல் தொழில்நுட்பம், பெரியளவில் சகாப்தத்தை ஏற்படுத்தியது.

மேலும், நம் வாழ்வின் அங்கமாகவும் மாறியுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்பத்தால், மகத்தான நன்மைகள் இருந்தாலும், இணைய பாதுகாப்பு, நமக்கும், தேசத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது

இதற்காக, தமிழக அரசு, ‘சைபர் அரங்கம்’ துவக்கியுள்ளது.

இதில், மாணவர்கள், ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்தோர், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதற்கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டன

நிதி மோசடிகள் மற்றும் இணைய வழி மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வருங்காலங்களில், மாவட்ட வாரியாக, ‘சைபர் கிரைம்’ காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்

இதன் வாயிலாக, ‘சைபர் கிரைம்’ குற்றங்கள் குறையும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories