3ம் பாலினத்தவர்களுக்கு உயர்கல்வி்; பல்கலையில் தனிஇடம் ஒதுக்கீடு.!

Published:

kolkatta - 2026

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி உரிமை வழங்கும் விதமாக கோல்கட்டா பல்கலை.,விண்ணப்பபடிவத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: கல்லூரி பயில செல்லும் போது விண்ணப்பிக்கும் படிவத்தில் பாலினம் குறித்து தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

தற்போது மூன்றாம்பாலினத்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அவர்களுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோல்கட்டா பல்கலைகழக துணை வேந்தர் சோனாலி சக்ரபோர்த்தி பானர்ஜி கூறி இருப்பதாவது:

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பல்கலைகழக மானிய ஆணையத்தின் பல்வேறு உதவித்திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டம் மூலம் உதவி செய்யும் வகையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய கால மாற்றத்திற்கு ஏற்ப பாலின அடிப்படையில் உயர் கல்வி வசதிகளில் எவ்வித பாகுபாடும் இருக்க கூடாது என்று தான் உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img