வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப் மூலம் பணத்தை செலுத்தும் வசதி! எஸ்பிஐ அதிரடி!

sbi - 2026

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி பணமோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டோ இல்லாமலே கூட கடைகளில் பொருட்களை வாங்கி மகிழலாம். அதாவது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் ஆப் மூலமாகவே பணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நீங்கள் உங்கள் செல்போனில் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்.

கடையில் ஒரு பொருளை வாங்கும் போது, உங்கள் செல்போனை அன்லாக் செய்துவிட்டு, பாயின்ட்-ஆப்-சேல் (பிஓஎஸ்) அருகே கொண்டுச் சென்றால் போதும், உங்களது எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் இருந்து பணம் தானாகவே செலுத்தப்பட்டுவிடும்.

இதன் மூலம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கிரெடிட் அல்லது டெபிட் அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கவலை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனி இல்லை.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இப்படி செல்போனை அன்லாக் செய்துவிட்டால் போதும், பணம் செலுத்தப்பட்டுவிடும் என்பது ஆபத்தானது அல்லவா என்று கேட்பவர்களுக்கு, ஸ்கிம்மர், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள் திருட்டு போன்றவற்றில் இருந்து தப்பிக்க இது உதவும் என்று கூறுகிறது வங்கி தரப்பு.

செல்போன் ஆப்பை எப்படி இன்ஸ்டால் செய்வது? பிளே ஸ்டோரில் இருந்து எஸ்பிஐ கார்டு ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.

ஃப்ர்ஸ்ட் டைம் யூஸர் அல்லது சைன் அப் லிங்கை கிளிக் செய்யவும்.

உங்களது கிரெடிட் கார்டு எண் அல்லது டெபிட் கார்டின் சிவிவி எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து ஒன் டைம் பாஸ்வேர்டைப் பெறவும்.

உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு அந்த ஒன் டைம் பாஸ்வேர்டு வரும். அந்த ஓடிபியை பதிவு செய்து, பிரஸீட் என்பதை அழுத்தவும்.

பிறகு உங்களது யூசர் ஐடி, பாஸ்வேர்ட், மீண்டும் பாஸ்வேர்டை பதிவு செய்து கன்ஃபர்ம்-ஐ கிளிக் செய்யவும்.

ALSO READ:  Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

ஆப்பை எளிதாக இயக்க எம்-பின் மற்றும் டச் ஐடி-ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.

உங்களுக்கு யூசர் ஐடியும், பாஸ்வேர்டும் ஏற்கனவே இருந்தால், எஸ்பிஐ கார்டு செல்போன் ஆப்பை டவுன்லோடு செய்து, லாகின் செய்யவும்.

பிறகு, உங்களது யூசர் ஐடி-ஐ பதிவு செய்து பிரஸீட் கொடுக்கவும். பாஸ்வேர்டை போட்டு லாக் இன் செய்யலாம்.

உங்களுக்கு தற்போது ஓடிபி என்ற ஒன்டைம்பாஸ்வேர்டு செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு வரும். அதனை பதிவு செய்து பிரஸீட் கொடுக்கவும்.

எளிதாக பயன்படுத்த எம்-பின் மற்றும் டச் ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம் என்று வங்கித் தரப்பு தெரிவிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories