சென்னை ஆழ்வார்பேட்டையில் ஞாயிறன்று நடந்த தனியார் நிகழ்வு ஒன்றில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி; அது சரியல்ல. யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்க்கக்கூடாது; பிற மதத்தை சேர்ந்தவர்களை மதிக்க வேண்டும்.
பீட்சா, பர்கர் போன்றவை நமது நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவை அல்ல; பிற நாடுகளுக்கு ஏற்றவை
யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது ‘பாடி’க்காக.
மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது; தாய்மொழியை நாம் மறக்கக்கூடாது இவ்வாறு அவர் பேசினார்.