ஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி! வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து!

thiruvalluvar saivar - 2026

திருவள்ளுவர் தினத்தை அரசியல்வாதிகள் இன்று கொண்டாடி வருகின்றனர். தாங்களும் அரசியல் ரீதியாக தமிழுக்கும் தமிழருக்கும் மதிப்பளிப்பதாக காட்டிக் கொள்வதற்காகவே திருவள்ளுவர் தினத்தை இன்று அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆங்கிலேயர்களின் மிச்சமாய் கிறிஸ்துவ மத பரப்புதலுக்காக, தமிழ் மண்ணின் பாரம்பரிய ஆன்மிக அடையாளங்களை அழிப்பதற்காக, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி திமுக., ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர் அடையாளங்களை அழித்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருவள்ளுவரின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி அனுஷ நட்சத்திரத்தை மாற்றி, தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப் படும் என்று கூறி, தை மாத இரண்டாம் நாளை திணித்தார்கள்.

அந்த அடிப்படையில் இன்று திராவிட இயக்கங்களின் அரசுகள் சார்பில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் வாதிகள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

இன்று காலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காவி உடையில் உள்ள திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்து, பின்னர் திமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதற்காக வெள்ளை உடையில் உள்ள திராவிடத் திருவள்ளுவரை பதிவு செய்தார். இதன் மூலம் திருவள்ளுவரின் இயல்பான முகத்தைக் கூட காட்ட இயலாத நெருக்கடி நிலைக்குத் தள்ளியிருக்கும் திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களுக்கு இரையானார் வெங்கய்ய நாயுடு. இவரது இந்தச் செயல், தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் மற்றும் உண்மைத் தமிழர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது .

இந்நிலையில், பிரதமர் மோடி தன் பங்குக்கு மிக மெதுவாக, திருவள்ளுவர் தின வாழ்த்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், மிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன. – என்று மோடி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories