பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு முஸ்லீம்கள் மனு… கொடுத்துள்ள அதே நேரத்தில், ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு கேட்டு இந்து முன்னணி மனு அளித்துள்ளது.
பாஜக பேரணியின்போது பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு திருப்பூர் காவல்நிலையத்தில் இஸ்லாமிய கட்சியான எஸ்.டி.பி.ஐ., கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை பா.ஜ.க சார்பில் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட பா.ஜ.க நிர்வாகி சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. ஹலால் பெயரில் இயங்கிய பிரியாணி அண்டாக்கள் தூக்கி வீசப்பட்டன.
இந்நிலையில் நாளை நடைபெறும் பேரணியின் போது பிரியாணி கடைகள் உள்ளிட்ட வர்த்தக இடங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர்கள், பிரியாணி குண்டாவுடன் வந்தனர்.
இந்த நிலையில், பிரியாணி குண்டாவுக்குப் போட்டியாக திருப்பூர் இந்து முன்னணியினரும் ஒரு மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில்… திருப்பூரில் சிஐஏ எதிர்ப்பு தொடர் போராட்டம் என்ற பெயரில் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதற்காக முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர். திருப்பூரில் தெருக்களில் ஆங்காங்கே ஆடுகள் சுற்றி திரிகின்றன. இவர்களும் சுற்றி திரிகின்றனர். முஸ்லிம் அமைப்பினரால் ஆடுகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒன்றுமறியாத வாயில்லா ஜீவன்களை ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்… இப்படிக்கு சதீஷ்குமார் என்று பெயரிட்டு திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார் திருப்பூர் மேற்கு மாநகர இந்துமுன்னணி பொதுச்செயலாளர் சதீஷ்குமார்.
இப்படி இரு தரப்பும் போட்டிக்கு போட்டியாக மனு அளித்துள்ளதால், திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.