December 6, 2025, 11:02 AM
26.8 C
Chennai

கரோனா வைரஸ் தொற்று: என்ன என்ன செய்ய வேண்டும்?

coronovirus - 2025

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 5 பேர்களில் 4 பேருக்கு தானாகவே சரியாகப் போய்விடும் ஆகவே இந்தியர்கள் கரோனா வைரஸ் குறித்து பீதியோ, பதற்றமோ அடையத் தேவையிலை என்று முன்னணி இந்திய ஆய்வாளரும் மருத்துவ விஞ்ஞானியுமான ககன்தீப் காங் என்பவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இத்தாலியப் பயணிகள் 16 பேர் உட்பட கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ள நிலையில் ககன் தீப் காங் கூறும்போது பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே கரோனா சோதனை தேவைப்படும் என்றார்.

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி பேராசிரியரான ககன் தீப் காங் கடந்த ஆண்டு காங் ராயல் சொசைட்டி ஆஃப் லண்டனுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கரோனா பற்றி பிடிஐக்குக் கூறியதாவது:

இப்போதைக்கு கரோனாவுக்கான அனைத்துச் சிகிச்சைகளும் நோயைத் தீர்ப்பதல்ல தடுக்கும் சிகிச்சைதான், 5 பேரில் 4 பேர்களுக்கு தானாகவே சரியாகி விடும், பாராசிட்டமால் போன்ற மருந்துகளே காய்ச்சலுக்குப் போதுமானது.

ஆனால் மூச்சுவிடுதலில் திடீர் சிரமம் ஏற்பட்டாலோ, அதனுடன் காய்ச்சல் இருமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவரைச் சந்தித்து விடுவது நல்லது.

அனைவரும் பயப்பட வேண்டியதோ, கவலையடைய வேண்டியதோ, பதற்றமடைய வேண்டியதோ இல்லை, தினமும் நம்மை வைரஸ்கள் பாதித்தே வருகின்றன. ஆனால் கை கால்களை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதையும், தரையை நன்றாகத் துடைத்து தொற்று எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வெண்டும், முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

பஞ்சின் மூலம் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா வைரஸ் சோதனை மேற் கொள்ளப்படுகிறது. சோதனை முடிய 12 முதல் 24 மணி நேரங்கள் வரை ஆகும்.

பிசிஆர் என்று அழைக்கப்படும் பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் முறையில் குறிப்பிட்ட டி.என்.ஏ. நகல்கள் சோதனைக்குட்படுத்தப்படும். கோவிட்-19ஐ விட இந்தியாவிலும் உலகிலும் இன்னமும் கூட ஃபுளூ வைரஸ்தான் அதிகமாக உள்ளது.

இதுதான் புரிதலுக்கு முக்கியமாகத் தேவை. இந்த கோவிட் 19 ஃபுளூ காய்ச்சலை விட தீவிர நோய்க்கூறு கொண்டது, ஆனால் சார்ஸை விட குறைந்த விளைவுகளையே கொண்டது.

இப்போதைக்கு ஃப்ளூ போன்றல்லாமல் கோவிட்-19 குழந்தைகளுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்ல. ஆனால் வயதானவர்களிடத்தில் கோவிட்-19 அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இருதயக் குழாய், ரத்தக்கொதிபு, சர்க்கரை நோய் உள்ளவர்களை கரோனா பாதித்து வருகிறது.

கரோனா உள்ளிட்ட வைரஸ்களுக்காக பல மருந்துகள் ஆராய்ச்சியில் இருந்து வருகின்றன, வாக்சைன்களும் ஆராயப்பட்டு வருகின்றன, அடுத்த ஆண்டு கரோனாவை தீர்த்துக் கட்ட மருந்துகள் தயாராகி விடும்.

காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்வது நல்லது. இருமல், தும்மல் போடும் நபர்களிடமிருந்து 6-10 அடி தள்ளி நிற்கவும்.

மேலும் நாவல் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் உடனே தொற்று ஏற்பட்டவர் கடுமையான உடல்நலக்குறைவடைந்து விடுவார் என்று அர்த்தமல்ல. இவ்வாறு கூறுகிறார் ககன் தீப் காங்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories