அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்து… கொடுக்க முடியாத சோகத்தில் திரும்பிய போஸ்ட்மென்!

postman in anbazhagan house - 2026

இன்று காலமான திமுக.,வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு 20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், கூட்ட நெரிசலால் இன்று அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் சோகத்தில் திரும்பினாராம்.

அன்பழகன் அண்ணாநகர் வீட்டில் இருந்தாலும் சரி, தற்போது இருக்கும் கீழ்பாக்கம் வீட்டிலும் சரி தினசரி தபால் கொண்டு வருபவர், போஸ்ட்மேன் சிதம்பரம். கடந்த 20 ஆண்டுகளாக இவர் தான் அன்பழகனுக்கு வரும் தபால்களை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை பணிக்கு வந்தபோதுதான் க.அன்பழகன் இறந்த செய்தி அவருக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு, அஞ்சலி செலுத்த ஒரு மாலையும் வாங்கிக்கொண்டு சோகத்துடன் வந்தார் சிதம்பரம்.

ஆனால் அங்கே ஏகத்துக்கும் கூட்டம். தாமும் அவர்களைப் போல், வரிசையில் நின்று சென்றால் தனது வேலை பாதிக்கும்; மற்ற தபால்களை விநியோகிக்க முடியாது என்பதால், போலீஸாரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

ஆனால் போலீசாரும் உள்ளே விடவில்லை, கட்சிக்காரர்களும் அவருக்காக பரிந்து கொண்டு வரவில்லை! 20 வருட அன்னியோன்னியத்தை எடுத்துக் காட்ட வழியின்றி சோகத்துடன் இருந்த சிதம்பரம், எப்படியாவது கடைசியாக அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு மீண்டும் மீண்டும் போலீசாரிடம் கெஞ்சினார். ஆனால் பலன் கிட்டவில்லை.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

வேறு வழியின்றி, தன் கையில் இருந்த மாலையையும் அன்பழகனுக்கு வந்த தபாலையும் போலீசாரிடம் கொடுத்துவிட்டு, நீங்களே என் சார்பில் இந்த மாலையைப் போட்டு விடுங்கள்… என்று கூறிவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தார் போஸ்ட்மேன் சிதம்பரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories