December 7, 2025, 2:55 AM
25.6 C
Chennai

ஐயோ என்னை கடத்திட்டாங்க.. அலறி ஓடி வந்த +2 மாணவி! நாடகத்தால் அதிர்ந்த போலீஸ்!

exam 1 - 2025

சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் மிகவும் பதற்றத்துடன் ஓடி வந்து தன்னை சிலர் கடத்தி விட்டதாகவும், அவர்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பரபரப்புடன் இருந்த அப்பெண்ணை நிதானப்படுத்திய போலீசார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர் அப்பொழுது அவர் தான் பெங்களூரை சேர்ந்தவர். எனது தந்தை ரமேஷ். சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வீட்டிற்கு பால் கொண்டு வந்த நபர் ஒருவர் முகத்தில் மயக்க மருந்து அடித்து அவரது நண்பருடன் என்னை காரில் கடத்திச் சென்றுவிட்டனர். பின்னர் வேறு காருக்கு மாற்றும்போது நான் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

police station 2 - 2025

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூக்கடை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டபோது, அப்பெண் ரயிலில் இருந்து இறங்கி சிறிது தூரம் வந்து பின்னர் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி விட்டு பதற்றமாக காவல் நிலையம் ஓடி வந்தது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கண்ட போது, நான் பிளஸ் 2 படிக்கிறேன். தேர்வு நடைபெறுகிறது. வேதியல் பாடம் நன்றாக படிக்கவில்லை அதனால் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு ஓடிவந்து கடத்தியது போல நாடகமாடினேன் என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories