உஷார்: எப்படியெல்லாம் திருடுறாங்கப்பா? ஏடிஎம் -ல் முதியவர் இழந்த பணம்!

atm 3 - 2026

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் எடுத்துக் கொடுப்பது போல் உதவி செய்து ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றதாக முதியவர் அளித்த புகாரின் பேரில் மோசடி நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரில் வசிப்பவர் ராஜேந்திரன் (62). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 10-ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவல்லிக்கேணி, துளசிங்கபெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்முக்குச் சென்று ராஜேந்திரன் பணம் எடுத்துள்ளார்.

அப்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், ராஜேந்திரனிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் ராஜேந்திரன் திணறியபோது பணம் எடுத்துக் கொடுக்க உதவியுள்ளார்

atm 1 - 2026

அந்த நபர். ‘தகுந்த நேரத்தில் உதவி செய்தீர்கள் தம்பி’ என்று ராஜேந்திரன் அவரிடம் நன்றி கூறிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவருக்கு உதவிய அந்த நபர் ராஜேந்திரனிடம் கார்டை வாங்கி ஏடிஎம் மெஷினில் தேய்த்தார். ஆனால், அதைத் திருப்பித் தராமல், தன்னிடமிருந்த வேறொரு எஸ்பிஐ டம்மி கார்டைக் கொடுத்துள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பின் நம்பரை ராஜேந்திரன் பதிவு செய்யும்போது அதை நோட்டம்விட்டு பின்னர் அவர் கார்டைப் பயன்படுத்தியுள்ளார். கடந்த நான்கு நாட்களில் ராஜேந்திரன் வங்கிக் கணக்கில் இருந்த பணம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை அந்த நபர் எடுத்துள்ளார்.

atm 2 - 2026

தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் மெசேஜ் வந்தும் அதை ராஜேந்திரன் கவனிக்காததால் அவர் அதுகுறித்து எச்சரிக்கை அடையாமல் விட்டுவிட்டார். நேற்று தனது வங்கிக் கணக்கைச் சோதித்தபோது அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது தெரிந்து கடந்த 14-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இது தொடர்பான புகார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா உள்ளதால் அந்தக் காட்சிகளையும், மற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories