December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

உஷார்: எப்படியெல்லாம் திருடுறாங்கப்பா? ஏடிஎம் -ல் முதியவர் இழந்த பணம்!

atm 3 - 2025

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் எடுத்துக் கொடுப்பது போல் உதவி செய்து ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றதாக முதியவர் அளித்த புகாரின் பேரில் மோசடி நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரில் வசிப்பவர் ராஜேந்திரன் (62). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 10-ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவல்லிக்கேணி, துளசிங்கபெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்முக்குச் சென்று ராஜேந்திரன் பணம் எடுத்துள்ளார்.

அப்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், ராஜேந்திரனிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் ராஜேந்திரன் திணறியபோது பணம் எடுத்துக் கொடுக்க உதவியுள்ளார்

atm 1 - 2025

அந்த நபர். ‘தகுந்த நேரத்தில் உதவி செய்தீர்கள் தம்பி’ என்று ராஜேந்திரன் அவரிடம் நன்றி கூறிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவருக்கு உதவிய அந்த நபர் ராஜேந்திரனிடம் கார்டை வாங்கி ஏடிஎம் மெஷினில் தேய்த்தார். ஆனால், அதைத் திருப்பித் தராமல், தன்னிடமிருந்த வேறொரு எஸ்பிஐ டம்மி கார்டைக் கொடுத்துள்ளார்.

பின் நம்பரை ராஜேந்திரன் பதிவு செய்யும்போது அதை நோட்டம்விட்டு பின்னர் அவர் கார்டைப் பயன்படுத்தியுள்ளார். கடந்த நான்கு நாட்களில் ராஜேந்திரன் வங்கிக் கணக்கில் இருந்த பணம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை அந்த நபர் எடுத்துள்ளார்.

atm 2 - 2025

தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் மெசேஜ் வந்தும் அதை ராஜேந்திரன் கவனிக்காததால் அவர் அதுகுறித்து எச்சரிக்கை அடையாமல் விட்டுவிட்டார். நேற்று தனது வங்கிக் கணக்கைச் சோதித்தபோது அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது தெரிந்து கடந்த 14-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இது தொடர்பான புகார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா உள்ளதால் அந்தக் காட்சிகளையும், மற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories