சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

CBI
CBI

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, சிறப்பு குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையில் விசாரணை குழு அமைத்த‌து சிபிஐ.,! இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு
  • தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார் நீதிபதி
  • ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
sathankulam son and father
sathankulam son and father

சாத்தான்குளம் வர்த்தகர்களான தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது இந்த நிலையில், வழக்கு குறித்து விசாரிக்க 7 அதிகாரிகள் நாளை தமிழகம் வர இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து பலகட்ட உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசுத்தரப்பில், இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், தலைமை காவலர் ரேவதி உட்பட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது. 

மேலும்,  கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட உள்ளது, தற்போது வரை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. 

இதை அடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,”ஜூலை 7ஆம் தேதியே தில்லி சிபிஐ அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதன் நகல் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணைப்பிரிவின் 7 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் தமிழகம் வந்து விசாரணையை தொடங்க உள்ளனர் என்றும், விசாரணைக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிபிஐ, அல்லது சிபிசிஐடி எதுவாக இருந்தாலும் கைது செய்யப்பட்டவர்களை கைது செய்த முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

வழக்கு குறித்து சிபிசிஐடி தரப்பில் முழுமையான விசாரணை அறிக்கைகளை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

மேலும், அச்சு, காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வழக்கு விசாரணைக்கு இடையூறாக செய்தி வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

சாத்தான்குளம் விவகாரத்தில், சிபிஐ., பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories