சாலையோரங்களில் மரங்கள்… பசுமைக்குடியின் முயற்சியில் மரக்கன்றுகள் நடல்!

tree plantation in karur - 2026

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வரவணை ஊராட்சியில் சாலைகள் அனைத்தும் சோலைகளாக மாற்றும் முயற்சியாக ஒவ்வொரு ஊராக சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்கும் முயற்சியில் இரண்டாவது ஊராக இன்று பாலப்பட்டியில் மரம் நடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊர்களில் உள்ள சாலைகளிலும் முதற்கட்டமாக 100 மரங்கள் 15 ஊர்களிலும் நட இருக்கிறோம்.

இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் மக்கள் பெரும்பாலும் நடந்தே சென்றனர். வணிகர்கள், அரசு சேவகர்களே கூட போக்குவரத்து சாதனங்களாக மாட்டு வண்டி குதிரை வண்டி என்று பயன்படுத்தினர். சாலை ஓரங்களில் மரங்கள் இருக்கும்போது நிழலில் பயணிக்கும் நல்வாய்ப்பு இருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நவீன சாலைகள் அமைக்கப்பட்ட போது கூட சாலை ஓரங்களில் மரங்கள் நடப்பட்டது.

ஆனால் இன்று அனல் பறக்கும் சாலைகள் தான் உள்ளது . நவீன போக்குவரத்து சாதனங்கள் வளர்ச்சிக்கு பின்னர் குளிர்சாதன வசதியுடன் சாலைகளில் செல்லும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால் இன்று நம் பயணம் எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக உணர்ந்திருப்பர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கூட சாலையோர மரங்கள் மூலம் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் வழி இருந்தது. இன்று பெரும்பாலும் பல ஊர்களில் சாலைகள் மரங்கள் இல்லாமல் தான் உள்ளது.

அதற்கு நம் ஊர் விதிவிலக்கல்ல. இன்று நடப்படும் மரங்கள் பல ஆண்டுகள் கழித்து தான் பலனளிக்கும் என்றாலும் இம்முயற்சியினை தொடர்ந்து எடுத்து சென்று வருங்கால தலைமுறை இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழவும், பசுமை கிராமமாக மாறவும் அனைவரும் உதவுங்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒரு நாட்டுக்கு அடிப்படை கிராமம் தான். அதனால்தான், நமது மகாத்மா காந்தி கூட , “கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு” என்று கூறினார். நம்_கிராமம் ..நம் தேசம். வளம் பெறச் செய்வோம். நலம் பெற்று வாழ்வோம். எனவே ஒவ் வொருவரும் நமது கிராமத்தை பசுமையாக மாற்ற உறுதி ஏற்போம்… என்கிறார் பசுமைக்குடியின் நரேந்திரன் கந்தசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories