இருக்கும் போதே என் லட்சியத்தை எட்டிவிட்டேன்!

sriparacharan
sriparacharan
  • இருக்கும் போதே… என் லட்சியத்தை எட்டிவிட்டேன்..
  • அயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய வழக்கறிஞர் பராசரன்..

”மிஸ்டர். பராசரன், நீங்கள் நீண்டநேரம் நின்றுகொண்டே விவாதம் செய்கிறீர்கள்… உங்கள் வயது மூப்பை கருத்தில் கொண்டு இருக்கை அளிக்கிறேன். அதில், அமர்ந்துகொண்டு விவாதம் செய்யலாமே…”

”மை லார்ட்! என்மீது நீங்கள் காட்டும் கருணைக்கு நன்றி. ஆனால், ஒரு வழக்கறிஞர் நின்றுகொண்டு வாதிடுவதுதான் சரி. நான் அந்த மரபைக் கடைபிடிப்பவன்!” என்று எதிர்முனையில் பதில் வந்தது.

அயோத்தி வழக்கின்போது இப்படி கேட்டவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. பதிலளித்தவர், 92 வயது வழக்கறிஞர் பராசரன் அவர்கள்.

40 நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக அயோத்தி வழக்கு நடந்துவந்தது.அந்த 40 நாள்களும் தவறாது ஆஜராகி வாதிட்டார் பராசரன்அவர்கள்.

ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியளவில் தொடங்கும் விவாதம், மாலை 4-5 மணி வரைகூட நீடிக்கும். இவரின், வயதைக் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , ‘சேரில் அமர்ந்து வாதிடலாமே’ என்று அக்கறை காட்டினார்.

”இந்த வழக்குதான் என் கடைசி வழக்கு. இனிமேல் எந்த வழக்கிலும் நான் ஆஜராக மாட்டேன். இறப்பதற்கு முன் என் லட்சியத்தை எட்டிவிட்டேன்” என்று தீர்ப்புக்குப் பிறகு குறிப்பிட்ட பராசரன் அவர்கள்,இன்று பூமி பூஜையை வீட்டில் அமர்ந்தபடி காணும் காட்சி..

குறிப்பு; இவர்கள் கும்பாபிஷேகத்தை நேரில் காண அந்த ஸ்ரீராமர் அணுகிரகம் செய்ய பிரார்த்திப்போம்..

மேலும் இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர்..?அதில் குறிப்பிடதக்கவர்களில் முக்கியமானவர்கள், அத்வானி ஜி, முரளி மனோகர் ஜோஷி, மறைந்த பிரமோத் மகாஜன்,விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் மறைந்த அசோக் சிங்கால்,உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.மற்றும் உமா பாரதி,இந்துத்துவாவில் வெறியாக இருந்த சாத்வி ரிதம்பரா ஆகியவர்களை குறிப்பிடலாம்.

இன்று பூமி பூஜையில் வைக்கப்பட்ட தங்கம்,மற்றும் வெள்ளியால் ஆன கற்கள் போன்றவர்கள் இவர்கள். இவர்கள்தான் இந்த கோவிலின் அஸ்திவாரம்..அஸ்திவார கற்கள் வெளியில் தெரிவதில்லை..

ஆனால்..? இந்த கற்களின் பலத்தால்தான் இந்த கோயில் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது.. இவர்களுக்கும், இந்த இடத்திற்காக உயிர் நீத்த கரசேவை தொண்டர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • ராம சேவகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories