December 6, 2025, 6:32 AM
23.8 C
Chennai

இருக்கும் போதே என் லட்சியத்தை எட்டிவிட்டேன்!

sriparacharan
sriparacharan
  • இருக்கும் போதே… என் லட்சியத்தை எட்டிவிட்டேன்..
  • அயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய வழக்கறிஞர் பராசரன்..

”மிஸ்டர். பராசரன், நீங்கள் நீண்டநேரம் நின்றுகொண்டே விவாதம் செய்கிறீர்கள்… உங்கள் வயது மூப்பை கருத்தில் கொண்டு இருக்கை அளிக்கிறேன். அதில், அமர்ந்துகொண்டு விவாதம் செய்யலாமே…”

”மை லார்ட்! என்மீது நீங்கள் காட்டும் கருணைக்கு நன்றி. ஆனால், ஒரு வழக்கறிஞர் நின்றுகொண்டு வாதிடுவதுதான் சரி. நான் அந்த மரபைக் கடைபிடிப்பவன்!” என்று எதிர்முனையில் பதில் வந்தது.

அயோத்தி வழக்கின்போது இப்படி கேட்டவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. பதிலளித்தவர், 92 வயது வழக்கறிஞர் பராசரன் அவர்கள்.

40 நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக அயோத்தி வழக்கு நடந்துவந்தது.அந்த 40 நாள்களும் தவறாது ஆஜராகி வாதிட்டார் பராசரன்அவர்கள்.

ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியளவில் தொடங்கும் விவாதம், மாலை 4-5 மணி வரைகூட நீடிக்கும். இவரின், வயதைக் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , ‘சேரில் அமர்ந்து வாதிடலாமே’ என்று அக்கறை காட்டினார்.

”இந்த வழக்குதான் என் கடைசி வழக்கு. இனிமேல் எந்த வழக்கிலும் நான் ஆஜராக மாட்டேன். இறப்பதற்கு முன் என் லட்சியத்தை எட்டிவிட்டேன்” என்று தீர்ப்புக்குப் பிறகு குறிப்பிட்ட பராசரன் அவர்கள்,இன்று பூமி பூஜையை வீட்டில் அமர்ந்தபடி காணும் காட்சி..

குறிப்பு; இவர்கள் கும்பாபிஷேகத்தை நேரில் காண அந்த ஸ்ரீராமர் அணுகிரகம் செய்ய பிரார்த்திப்போம்..

மேலும் இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர்..?அதில் குறிப்பிடதக்கவர்களில் முக்கியமானவர்கள், அத்வானி ஜி, முரளி மனோகர் ஜோஷி, மறைந்த பிரமோத் மகாஜன்,விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் மறைந்த அசோக் சிங்கால்,உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.மற்றும் உமா பாரதி,இந்துத்துவாவில் வெறியாக இருந்த சாத்வி ரிதம்பரா ஆகியவர்களை குறிப்பிடலாம்.

இன்று பூமி பூஜையில் வைக்கப்பட்ட தங்கம்,மற்றும் வெள்ளியால் ஆன கற்கள் போன்றவர்கள் இவர்கள். இவர்கள்தான் இந்த கோவிலின் அஸ்திவாரம்..அஸ்திவார கற்கள் வெளியில் தெரிவதில்லை..

ஆனால்..? இந்த கற்களின் பலத்தால்தான் இந்த கோயில் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது.. இவர்களுக்கும், இந்த இடத்திற்காக உயிர் நீத்த கரசேவை தொண்டர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • ராம சேவகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories