உயரும் விமான பயணர் கட்டணம்!

madurai-airport3

கொரோனா வைரஸ் பரவலால் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விமான போக்குவரத்து துறை பெரிய இழப்பை சந்தித்துள்ளது. நம் நாட்டில் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வருவாய் இழப்பு மற்றும் நஷ்டத்தை ஈடுகட்ட, பணியாளர்கள் எண்ணிக்கை குறைத்தல், சம்பள குறைப்பு மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான பயணர் கட்டணத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. அதாவது உள்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான பயணர் கட்டணம் ரூ.160ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அது ரூ.150ஆக உள்ளது. அதேபோல் வெளிநாட்டு பயணிகளிடம் வசூலிக்கப்படும் விமான பயணர் கட்டணம் 4.85 டாலரிலிருந்து 5.2 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விமான பயணர் கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

விமான பயணர் கட்டணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிக்கெட்டோடு வசூலிக்கப்படுகிறது. விமான பயணர் கட்டணத்தை விமான நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து வசூலித்து மத்திய அரசிடம் வழங்குகின்றன. விமான பயணர் கட்டணம் வாயிலாக கிடைக்கும் பணத்தை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவிடுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

Topics

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Entertainment News

Popular Categories