December 6, 2025, 7:58 AM
23.8 C
Chennai

கொரோனா: பெற்றோர் வாங்க மறுத்த குழந்தை! இறுதிச்சடங்கு செய்த தன்னார்வலர்!

help

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார் தன்னார்வலராக மாறியுள்ள தேநீர் கடைக்காரர் ஒருவர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருவதால், பலர் தன்னார்வலர்களாக முன்வந்து கொரோனாவால் பாதித்தவர்களின் உடலிற்கு இறுதிச்சடங்கு நிகழ்த்துகின்றனர்.

அந்த வகையில், பெங்களூருவில், தேநீர்க் கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னார்வலராக மாறி அப்பகுதி மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.

பெங்களூருவில் தேநீர் கடை வைத்திருப்பவர் அப்துல் ரசக். 40 வயதாகும் அவர், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலிற்கு இறுதிச்சடங்கு நடத்திவருகிறார்.

child-karanadaka

இந்த நிலையில், செய்ண்ட் ஜான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

அதனை அடுத்து, அந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு நடத்த முன்வந்த ரசக், தனி ஆளாக அந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு நடத்தியுள்ளார். அவருக்கு அந்த குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்து, அவரது இந்த சேவைக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரசக் பேசியபோது, “ஊரடங்கு காலம் என்பதால் என் தேநீர் கடை சரியாக ஓடவில்லை. இதனால் கிடைக்கும் நேரத்தில் தொண்டு செய்துவருகிறேன்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க குடும்பத்தினர் சிலர் மறுக்கும் நிலையில், இதுபோன்று செய்வது சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று கூறியுள்ளார். இவர் குறித்து வீடியோவை பெங்களூரு மிரர் செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories