ஆன்லைன் மீட்டிங்கின் போது தனது செயலாளருடன் உடலுறவு வைத்துக் கொண்ட அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார்.
பிலிப்பைன்ஸில் அரசு அதிகாரிகளின் கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. ஜூம் என்ற செயலி மூலம் கூட்டத்தை தொடங்கி ஆலோசிக்க இருந்தனர். அந்தக் கூட்டத்தில் கிராம சபையின் தலைவர் ஜீசஸ் எஸ்டில் என்பவரும் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கிய போதும் அவர் ஸ்கிரீனில் வரவில்லை. ஆனால் அவர் தூரத்தில் இருப்பது தெரிந்தது. அவருடன் அவரது செயலாளரும் இருந்தார்.
கேமரா ஆன் ஆகி இருப்பது தெரியாமல் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதாவது உடலுறவு கொள்வதற்கு முன்பு அவர் கேமராவை ஆஃப் செய்துள்ளார்.
ஆனால் சரியாக ஆஃப் செய்யாததால் கேமரா ஆனிலேயே இருந்துள்ளது. அது தெரியாமல் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளனர்.
அந்த காட்சியை இணைப்பில் இருந்த ஒரு நபர் பதிவு செய்து விட்டார். அதனைத் தொடர்ந்து அந்த காட்சி இணையத்தில் வைரலானது. இதைக்கண்ட கிராமவாசிகள் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதனையடுத்து நாட்டின் உள்ளாட்சித்துறை எஸ்டிலை பதவியில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.