February 21, 2026, 7:24 PM
29 C
Chennai

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்து மதம்! அண்ணாமலையாருக்கு இவ்ளோ கட்டுப்பாடுகள்!

sandeep nanduri
sandeep nanduri

கொரோனாவைக் காரணம் காட்டி, இந்து மதம் சார்ந்த விழாக்கள், ஆலய நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தமிழகத்தில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.

இதற்கு திருவண்ணாமலை அருணாச்சல்லேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவும் விதிவிலக்கல்ல…!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 20ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் 29 ஆம் தேதி தீபம் அன்று பரணி தீபத்திற்கும்,மகா தீபத்திற்கும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆகம விதிகளின் பிரகாரம் கோவிலுக்குள் தேரோட்டம் நடைபெறும்.தேரோட்டத்திற்கு பக்தர்கள். ஆன்லைன் மூலம் பக்தர்கள் பதிவு செய்தபின் கோவிலுக்குள் வரலாம். காலை ஆறு முப்பது முதல் இரவு ஆறு முப்பது மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைன் மூலம் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பக்தர்களும் ஆன்லைன் வாய்ப்பு கிடைக்காதவர்கள் 3000 பக்தர்களும் ஆக ஆக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவ வசதிக்காக 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். சிறப்பு பேருந்துகள் கிடையாது. மாவட்ட எல்லையில் 18 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும்

28 மற்றும் 29 ஆம் தேதிகளில் உள்ளூர் வாசிகள் மட்டும் சோதனைச்சாவடிகளில்அனுமதிக்கப்படுவர்.முகவரி அடையாள அட்டை காட்டிவிட்டு உள்ளூர்வாசிகள் உள்ளே வரலாம்.

தீப விழா காண்பதற்கு வருகின்ற வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் தொலைக்காட்சிகள் கோவில் சார்பாக யூடியூப் சேனல் மூலம் திருவிழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

வெளி இடங்களில் அன்னதானம் செய்வதற்கு அனுமதி இல்லை.
அன்னதானம் கோவிலுக்குள் நடைபெறும் அதுவும் பார்சல் செய்து தரப்படும். மகா தீபம் அன்றும் அதை தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு அனுமதி இல்லை…. என்று குறிப்பிட்டார்.

  • செய்தி: எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories