December 5, 2025, 1:47 PM
26.9 C
Chennai

ஜோதிமணியின் செயல்பாடு பிடிக்கலயாம்! அதிமுக.,வில் இணைந்த காங்கிரஸ் கரூர் மாவட்ட பொதுச் செயலர்!

karur-congress-district-general-secretary-joined-admk
karur-congress-district-general-secretary-joined-admk

காங்கிரஸ் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் அ.தி.மு.க வில் இணைந்தார்

கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் ஜோதிமணியின் கட்சி செயல்பாடு பிடிக்காத நிலையில்,  ஆங்காங்கே அக்கட்சியினர் (காங்கிரஸ் கட்சியினர்) பலர் பல்வேறு கட்சிகளில் சேர்ந்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்திலிருந்து தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு சிலர் நேரடியாகவே மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் தீவிர ஆதரவாளருமான சுரேகா பாலசந்தர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தார்.

karur-congress-district-general-secretary-joined-admk2
karur-congress-district-general-secretary-joined-admk2

இந்நிகழ்ச்சியில் இவரது தலைமையில் மகிளா காங்கிரஸ் நிர்வாகி பொன்னரசி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மதுமிதா ஆகியோரும் அ.தி.மு.க வில் இணைந்தனர். மேலும், கரூர் தெற்கு நகர அ.தி.மு.க செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர செயலாளர் கார்த்திக் மற்றும் அ.தி.மு.க நிர்வாகி முருகேஷன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுரேகா பாலசந்தர்., கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினை அழிக்காமல் ஓயமாட்டார். மேலும், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போதே மத்திய அமைச்சர் கனவோடு கட்சியின் நிர்வாகிகள் தொடர்பு கொண்டால் போன் எடுப்பதில்லை, மேலும் கட்சியின் உண்மை விசுவாசிகளை மதிக்காமல் அவரே அவருக்கு ஒரு தனி வட்டம் போட்டுக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினர் போல், செயல்படாமல், தி.மு.க கட்சிக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினர் போல் செயல்பட்டு வருவதாகவும் அ.தி.மு.க வில் இணைந்த போது தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை தி.மு.க கட்சியில் இவரே சேர்த்து விடுவது போல உள்ளதால் தான் அன்னை சோனியாவிற்கு பதிலாக அம்மா ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினேன், வருங்காலத்தில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஐயா ஒ.பி.எஸ் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வழியில் அ.தி.மு.க கட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories