விவசாயிகளை கடவுள் போலப் பார்க்கிறது பாஜக: ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ பிரசாரத்தில் குஷ்பு!

kushboo-in-madurai
kushboo-in-madurai

மதுரையில் குஷ்பு பாஜக.,வை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பேசினார்.

தமிழக பாஜக சார்பில் “விவசாயிகளின் நண்பன் மோடி” என்கிற பிரச்சார பயணம் தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. மதுரை ஊமச்சிகுளத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பூ கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ கூறுகையில் “வட மாநிலங்களில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது, தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தூண்டி விடப்படுகிறது, ஒன்றரை லட்சம் விவசாயிகள் ஒத்துக் கொண்டதால் வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டது,

எதிர்க்கட்சிகள் விவசாயிகள் வாழ்வில் விளையாட வேண்டாம், வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது.

kushboo-speech-madurai
kushboo-speech-madurai

பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்த்து வருகின்றது. தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேசவில்லை. விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது!

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

வேளாண் சட்டத்தை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விசயத்திற்கு வேளாண் சட்டத்தில் தீர்வு கூறப்பட்டுள்ளது, வேளாண் சட்டத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் 5 இலட்சம் லாபம் கிடைக்கும், 10 ஆண்டுகளில் திமுக – காங்கிரஸ் மக்களின் பிரச்சினைகளை பேசவில்லை!

மக்கள் பிரச்சினைகளை தீர்த்து இருந்தால் திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்கும். டெல்லியில் நடைபெறும் போராட்டம் விவசாயிகள் போராட்டம் அல்ல, எதிர்கட்சிகள் தூண்டி விட்ட போராட்டம் தான் நடைபெறுகின்றது!

முத்தலாக் சட்டத்தால் நிறைய பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே!

பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது, சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது எனக்குத் தெரியாது! எம்.எல்.ஏ சீட்டுக்காக நான் கட்சியில் இருக்க மாட்டேன்!

முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும்.. பிறகு பார்க்கலாம்! அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை மக்கள் எதிர்க்கவில்லை! யார் முதல்வர் வேட்பாளர் என்பதை 2 தலைமைகளும் பேசி மட்டுமே முடிவு செய்யும்! ஜே.பி.நட்டாவும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பேசி முடிவு எடுத்து அறிவிப்பார்கள்” என கூறினார்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories