December 5, 2025, 6:07 PM
26.7 C
Chennai

சானிடைஸரால் கைரேகை அழியும் அபாயம்! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

Fingerprint
Fingerprint

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை (சானிடைஸர்) பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அலுவலகத்துக்குச் செல்லும்முன்பும், பொது மக்கள் ஹோட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், நகை, ஜவுளி கடைகளுக்குச் செல்லும் முன்பும் கைகளில் சானிடைஸரைத் தடவிய பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் அடிக்கடி கிருமிநாசினியைப் பயன்படுத்தினால் கைரேகை அழியும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தைச் சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற சரும மருத்துவ நிபுணர், “தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

biometric
biometric

ஆனால், அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வருகைப் பதிவில் சிக்கல்கள் ஏற்படும்.

சானிடைஸர் உட்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால் மேல் தோல் உரிதல் அதிகரிக்கும். இதன் காரணமாக ஆல்கஹால் தன்மை கொண்ட சானிடைஸருக்குப் பதிலாக சோப்பைப் பயன்படுத்தலாம். கிருமி நாசினியால் கைரேகை அழியும் நிலை ஏற்படும்போது வைட்டமின் ‘ஏ’ வகையான பொருட்களைப் பயன்படுத்தினால் தோல் வேகமாக மீண்டும் உருவாகும்” என்று கூறியுள்ளார்.

sanitation
sanitation

குஜராத் மருத்துவக் கல்லூரி டாக்டர் பிரனாய்ஷா என்பவரும், கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால், கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளார். போபாலைச் சேர்ந்த நேகால் மிஸ்திரி என்பவர், “நான் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 முறை கிருமி நாசினியைப் பயன்படுத்தினேன். தற்போது எனது கைரேகை சரியாகப் பதிவாகவில்லை. இது தொடர்பாக நான் சரும மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பயோ மேட்ரிக் முறையைப் பயன்படுத்தும் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களில் 3 முதல் 4 சதவிகிதம் பேர் தங்களது கைரேகை பதிவாகவில்லை என்று முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories