சானிடைஸரால் கைரேகை அழியும் அபாயம்! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

Fingerprint
Fingerprint

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை (சானிடைஸர்) பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அலுவலகத்துக்குச் செல்லும்முன்பும், பொது மக்கள் ஹோட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், நகை, ஜவுளி கடைகளுக்குச் செல்லும் முன்பும் கைகளில் சானிடைஸரைத் தடவிய பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் அடிக்கடி கிருமிநாசினியைப் பயன்படுத்தினால் கைரேகை அழியும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தைச் சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற சரும மருத்துவ நிபுணர், “தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

biometric
biometric

ஆனால், அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வருகைப் பதிவில் சிக்கல்கள் ஏற்படும்.

சானிடைஸர் உட்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால் மேல் தோல் உரிதல் அதிகரிக்கும். இதன் காரணமாக ஆல்கஹால் தன்மை கொண்ட சானிடைஸருக்குப் பதிலாக சோப்பைப் பயன்படுத்தலாம். கிருமி நாசினியால் கைரேகை அழியும் நிலை ஏற்படும்போது வைட்டமின் ‘ஏ’ வகையான பொருட்களைப் பயன்படுத்தினால் தோல் வேகமாக மீண்டும் உருவாகும்” என்று கூறியுள்ளார்.

sanitation
sanitation

குஜராத் மருத்துவக் கல்லூரி டாக்டர் பிரனாய்ஷா என்பவரும், கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால், கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளார். போபாலைச் சேர்ந்த நேகால் மிஸ்திரி என்பவர், “நான் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 முறை கிருமி நாசினியைப் பயன்படுத்தினேன். தற்போது எனது கைரேகை சரியாகப் பதிவாகவில்லை. இது தொடர்பாக நான் சரும மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பயோ மேட்ரிக் முறையைப் பயன்படுத்தும் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களில் 3 முதல் 4 சதவிகிதம் பேர் தங்களது கைரேகை பதிவாகவில்லை என்று முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories