குறைகளை களைய வாட்ஸ்அப் சேனல்! ஹை சொல்லி இணையுங்கள்!

whatsapp
whatsapp

தமிழக அரசின் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) ஆனது பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் சேனல் ஒன்றை 26 பிப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளது.

குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர, GCC மற்றும் பொதுமக்களிடையே பயனுள்ள தகவல்தொடர்புக்கான வசதியாகவும் இந்த வாட்ஸ்அப் சேனல் பயன்படுத்தப்படும்.

வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் முறையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் நகராட்சி அமைப்பு GCC தான் என்றும் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான தானியங்கி குறைகளை பதிவு செய்யும் முறை குடிமக்களுக்கு பதிவு செய்யப்பட்ட குறைகளின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும்.

gcc - 2026

முக்கியமான அறிவிப்புகள், புதுப்பிப்புகள், குறிப்பிட்ட கால நிகழ்வுகள், ஹெல்ப்லைன்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களுக்கும் இது வழி வகுக்கும். சரியான நேரத்தில், பயனாளிகளுக்கான தடுப்பூசி வெளியீட்டு முறைகள் குறித்த முக்கியமான தகவல்களும் இந்த சேனல் வழியாக வழங்கப்படும்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குதல், சரியான நேரத்தில் வரி செலுத்துதல் குறித்த நினைவூட்டல்கள் மற்றும் குடிமக்களுக்கு தேர்தல் சேவைகள் போன்ற குடிமக்களை மையமாகக் கொண்ட கூடுதல் சேவைகளை வழங்க இந்த வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் முறை உதவியாக இருக்கும் என்று என்று GCC தெரிவித்துள்ளது.

இந்த சேனலைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இந்த சேவையை பயனர்கள் பெற செய்ய வேண்டியது யாதெனில் GCC யின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என்று மெசேஜ் அனுப்புவதுதான். GCC யின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கின் தொலைபேசி எண் +91-94999 33644. பயனர்கள் மெசேஜ் செய்தவுடன், குறைகளைத் தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை எளிதில் பெறவும் முடியும்.

புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் சிஸ்டம் தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories