December 7, 2025, 11:02 AM
26 C
Chennai

தனியார் மருத்துவமனையிலும் முதியோர்களுக்கே முன்னுரிமை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

old-man
old-man

கொரோனா காலத்தில் அதிக இன்னலுக்குள்ளானது முதியவர்கள் தான். குறிப்பாக, ஆதரவற்று தனியாக வசிக்கும் முதியவர்களால் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை.

கொரோனா லாக்டவுனில் பெரிதும் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பதை உறுதிசெய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வனி குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தபோது, அரசு மருத்துவமனைகள் முதியவர்கள் கொரோனா மட்டுமல்லாமல் எந்த உடல்நலக் கோளாறு ஏற்பட்டாலும் முன்னுரிமை அளித்து அவர்களைக் கவனிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல அந்தந்த மாநில அரசுகள் வயதானவர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அவர்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருள்கள், மாஸ்க், சானிடைசர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதுதொடர்பான பாதுகாப்பை உறுதி செய்ததற்கான அறிக்கைகளையும் மாநில அரசுகள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. அதில் ஒடிசாவும் பஞ்சாப்பும் அறிக்கைகள் சமர்பித்தன. மற்ற மாநிலங்களுக்கு மூன்று வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் தனது உத்தரவைப் புதுப்பித்து புதிய உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories