சாகித்திய அகடமி விருதுகள்: தெலுங்கில் பெற்றார் நிகிலேஷ்வர்!

Published:

telugu sahidya academy winner - 2026

மத்திய சாகித்திய அகடமி 2020 அவார்டுகள் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

நிகிலேஷ்வர் -அக்னி ஸ்வாச- தெலுகு,  வீரப்பமொய்லி -ஸ்ரீ பாகுபலி,அஹம்சத்விக்விஜயம் -கன்னடம்,  அருந்ததி சுப்பிரமணியம் – When god is traveller (இங்கிலீஷ்), ஹரிஷ் மீனாக்ஷி -குஜராத்தி,  அனாமிகா -ஹிந்தி, ஆர் எஸ் பாஸ்கர் – கொங்கிணி, இருகபம் தேவன்- மணிப்புரி,  ரூப் சந்தத் ஹன்சா- சந்தாலி,  நந்த கரே- மராட்டி,  மகேஷ் சந்திர சர்மா- சம்ஸ்கிருதம், இமயம் – தமிழ், உசேன் உல் ஹக், அபூர்ப குமார் சைகியா – அஸ்ஸாமி, தரணீதர் ஓவாரி – போடோ, ஹ்ருதய கௌல் பாரதி – காஷ்மீரி, கமா காந்த் ஜா – மைதிலி, குருதேவ் சிங் ரூபானா – பஞ்சாபி, ஞான் சிங்- டோங்கிரி, ஜீதோ லால்வானீ – சிந்தி, மணிசங்கர் முகோபாத்யாயா – பெங்காலி.. ஆகியோர் மத்திய சாகித்திய அகாடமி விருது பெறுகிறார்கள். 
அரசியல் தலைவர், எழுத்தாளரான வீரப்பமொய்லிக்கு  மத்திய சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. 
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 20 மொழிகளில் கவிதைகள் , நான்கு நாவல்கள், 5 சிறுகதை நூல்கள், இரண்டு நாடகங்கள்  உள்ளன. 

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தெலுங்கு எழுத்தாளர் நிகிலேஷ்வருக்கு (82) விருது கிடைத்துள்ளது.  தெலுங்கில் நிகிலேஷ்வர் எழுதிய அக்னி ஸ்வாச என்ற கவிதை நூலுக்கு விருது கிடைத்துள்ளது. நிகிலேஷ்வர் என்பது இவருடைய புனைபெயர்.

இவருடைய  இயற்பெயர் கும்பம் யாதவரெட்டி. இவர் எழுதிய அக்னி ஸ்வாச  என்ற  கவிதை நூலுக்கு அவாாார்டு கிடைத்துள்ளது.  இவர் திகம்பர கவிஞர்களில் ஒருவராக பெயர் பெற்றவர். இவர்  கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சன நூல்கள் பல எழுதி உள்ளார்.

நிகிலேஷ்வர்  1938 ஆகஸ்ட் 11 ல்  தெலங்காணாவில் யாதாத்ரிபுவனகிரி மாவட்டம் வீரபல்லியில் பிறந்தார். ஆர்மி ஏர்போர்சில் பணிபுரிந்தவர்.

கோல்கொண்டா பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். உஸ்மானியா யுனிவர்சிட்டியில் படித்தார். திகம்பர கவிதைகள் எழுதுவதில் பெயர் பெற்றவர். இவர் படைப்புகளுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

எக்ஸ்ரே அவார்டு 1984, யேட்டுகூரி ராமமூர்த்தி சாாகித்ய அவார்டு 2003, சோனசுந்தர் விருது 2008, தெலுங்கு விஷ்வ வித்யாலயம் பிரதீபா பரஸ்பரம் 2011, ஶ்ரீீீீஶ்ரீ சென்டினரி  சாகித்திய அவார்டு 2010, ஃப்ரீ வெர்ஸ் ஃப்ரண்ட் விருது 2011 போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற நிகிலேஷ்வரையும் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் 2020 விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கொன்னகன்டி அனசூயாவையும்  பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கொன்னகன்டி அனசூயா  ஸ்நேகிதுலு என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img