சுதந்திர தின வைர விழா… வார்தா காந்தி ஆசிரமத்தில்!

IMG 20210313 WA0024 - 2026

காந்தியின் கொள்கைகள் உலகத்திற்கு வழிகாட்டுகிறது

சுதந்திரத்தின் வைரவிழா இன்று வர்தா மாவட்டத்தில் காந்தி ஆஸிரமில் இன்று கொண்டாடப்பட்டது.

  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக பாபு குடி என்னும் சேவாகிராம் ஆசிரமம் ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமில்லாமல் காந்தியடிகளின் கொள்கைகளை பரப்பும் மையமாக நிர்மாணம் செய்யும் முயற்சியாக சேவாகிராமின் வளர்ச்சிக்காக மாநில அரசு பட்ஜெட்டில் விசேஷ நிதியை ஒதுக்கியுள்ளது.

IMG 20210313 WA0023 - 2026

சேவா கிராமின் வளர்ச்சிக்காக அரசு நிதியை ஒதுக்கும் போது அதில் தொய்வு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுனில் கேதார், மஹாராஷ்டிரா மாநில கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கூறினார். அவர் இன்று பாபு குடியில் நடந்த சுதந்திரத்தின் வைரவிழா கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற விழாவில் இவ்வாறு பேசினார்.

மார்ச் 12ஆம் தேதி மகாத்மா காந்தியடிகள் அகமதாபாத்திலிருந்து தண்டி யாத்திரையை துவங்கிய நாளை நினைவு கூறும் விதமாக இன்று சுதந்திரத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா மாவட்டத்தில் பாபு குடியில் நடைபெற்றது.

IMG 20210313 WA0025 - 2026

ராம்தாஸ் தடஸ், மக்களவை உறுப்பினர்,ராம்தாஸ் அம்பட்கர், எம்எல்சி, ப்ரேரணா தேஷ்ப்ரதார், மாவட்ட கலெக்டர், அசோக் குமார் சரண், சர்வ சேவா சங்கத்தை சேர்ந்தவர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கேதார் மேலும் கூறுகையில்,”இன்றைய தினம் மக்களுக்கு ஊக்கம் தரும் தினமாக உள்ளது. இன்றைய தினம்தான் மகாத்மா காந்தியடிகள் சபர்மதியிலிருந்து தண்டி யாத்திரையை தொடங்கி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்து வைத்தார். அவருடைய சத்தியத்தினாலும் அகிம்சை வழியினாலும் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. காந்திஜியின் கொள்கைகள் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்கும் வழி காட்டுவதாய் அமைய வேண்டும் என்ற கொள்கையுடன் மாநில அரசு செயல்படுகிறது. சேவாகிராமம் என்ற தவ பூமியானது உலகுக்கே வழிகாட்டுவதாய் அமைந்துள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

IMG 20210313 WA0022 - 2026

“காந்தியடிகளின் தண்டி யாத்திரையின் தொடக்கத்தில் 78 பேர் மட்டுமே பங்குகொண்டனர். பின்னர் தண்டி யாத்திரையில் 60,000 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். காந்திஜியின் கொள்கையின் அடிப்படையில் தான் நாடு செல்கிறது. அவருடைய தத்துவங்கள் இன்றைய புது தலைமுறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று ராமதாஸ் தடஸ் கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அமைச்சரும் மற்ற விருந்தினர்களும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி சர்வசமய பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். சந்தியா தலவி, நாயப் தாசில்தார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரமத்தில் உள்ளோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories