கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உத்ஸவம்!

Published:

kolletikota temple1 - 2026
  • கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உத்ஸவம்.
  • கிருஷ்ணா மாவட்டம் கைகலூரு மண்டலம்

கொல்லேட்டிகோட்டை  கிராமத்தில் கொலுவீற்றிருக்கும் பெத்தின்ட்டி அம்மன் உற்சவம் ஞாயிறன்று தொடங்கியது.
இந்த மாதம் 28ஆம் தேதி வரை உற்சவங்கள் நடக்கும். கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மாவட்ட எல்லையில் விரிந்துள்ள கொல்லேறு ஏரியின் நடுவில் உள்ள தீவில்  கொல்லேட்டிகோட்டை கிராமம் உள்ளது. 

இங்கு கோவில்கொண்டிருக்கும் பெத்த இண்டி அம்மனை உள்ளூர் மீனவர்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஒன்பது அடி உயரமும் விசால நேத்திரங்களும் கொண்டு வீராசன முத்திரையில் வீற்றிருக்கும் பெத்தின்ட்டி  அம்மன் பக்தர்கள் கேட்கும் வரங்களை அருளும்  ஜல துர்காவாக வழிபடப்படுகிறாள். 

kolletikota temple - 2026

‘ஜாத்ரா’ உற்சவம் தொடர்பாக கொல்லேரு கிராமத்தில் வசிக்கும் ‘வட்டெர’ குல மக்களோடு கூட அஸ்ஸாம், ஒரிசா, ஆந்திரா, தெலங்காணா மாநிலங்களில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சேர்வார்கள்.

ஆலய ஆவரணத்தில் குளிர் பந்தல்கள் போட்டு மின் விளக்குகளால் அலங்கரித்து உள்ளார்கள். கொல்லேட்டி கோட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள இரும்பு பாலத்தை மராமத்து செய்ததோடு கூட அருகிலேயே தற்காலிகமாக மண் பாதையையும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

kolleru lake - 2026

கொல்லேட்டிகோட்டை செல்வதற்கு ஆக்கிவீடு, கைகலூரு, ஏலூரு ஆகிய இடங்களில் இருந்து சாலை வசதி உள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

‘ஜாத்தரா’ உற்சவத்தில் ஒரு பகுதியாக இந்த மாதம் 25ஆம் தேதி ஜலதுர்கா கோகர்ணேஸ்வர ஸ்வாமி திருக்கல்யாணம் நடக்க இருப்பதாக ஆலய  நிர்வாக அதிகாரி கந்துல வேணுகோபாலராவு தெரிவித்தார்.

kolletikota temple2 - 2026

அதிகார சம்பிரதாயமாக பட்டு வஸ்திரங்கள், முத்துக்கள்  ஆகியவற்றோடு கோகர்ணேஸ்வர சுவாமியை ஊர்வலமாக கொல்லேட்டி கோட்டைக்கு  அழைத்து வந்து கல்யாண மஹோத்ஸவம் நடத்த இருப்பதாக கூறினார்.

அம்மன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வண்ணம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோவிட் நிபந்தனைகளை அனுசரித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img