மணல் கொள்ளையைத் தடுத்தால் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள்: செந்தில் பாலாஜியின் ரவுடித்தன பேச்சு!

karur senthil balaji 1 - 2026

கரூரில் திமுக வேட்பாளரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜியின் பேச்சினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் மணல் கொள்ளையை தடுத்தால் அதிகாரிகள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று பேசியதால் அதிகாரிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

திமுக என்றாலே பிரியாணி கடை முதல், பரோட்டோ கடை வரை வன்முறையும், ப்யூட்டி பார்லர் முதல் பெட்டி கடை வரை வன்முறைதான்!

அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் போதே இத்தனை வன்முறைகளை அரங்கேற்றி வரும் நிலையில் தற்போது, வரக்கூடிய தேர்தலில் திமுக., வென்று முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து விடுவார் என்று ஆங்காங்கே திமுக.,வினர் மக்களிடம் சொல்லி வருகின்றனர். இந்நிலையில், திமுக.,வின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் முதல் திமுக உள்ளாட்சி பிரமுகர்கள் வரை, திமுக பிரமுகர்களும் கூட ஆங்காங்கே போலீஸாரையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டி வருகின்றனர்.

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியும் கூட போலீஸ் அதிகாரியை வெளிப்படையாக மிரட்டியதைக் கண்டு அரசு அதிகாரிகள், போலீஸார் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த மிரட்டல்களின் வரிசையில், கரூர் மாவட்ட திமுக.,வும் தன் கட்சியின் கொள்கைப்படி, பாரபட்சம் இல்லாமல் பேசி வருவதும் செயலில் இறங்கி இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக., பின்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பயணித்த செந்தில் பாலாஜியும் அவரோடு திமுக வில் இணைந்த பிரமுகர்களும் தற்போது நாங்கள் ரவுடி கட்சியில் இணைந்து விட்டோம் என்றும், ஆகவே எங்களை பகைத்து கொள்ளாதீர்கள் என்றும் ஆங்காங்கே அதிகாரிகளையும், பைனான்ஸ் பிரமுகர்களையும் மிரட்டி வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அதுவும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் (அப்போதைய ஆட்சியர்) இடம் மனு கொடுத்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வாகிய எனக்கு அழைப்பு வரவில்லை என்றால், இனி மாவட்ட ஆட்சியர் வெளியே நடமாட முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

அந்த மிரட்டல் சம்பவத்தின் சுவடு இன்னும் மறையாமல் உள்ள நிலையில் கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி பிரச்சாரத்தில் பேசிய பேச்சு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மே மாதம் மு.க.ஸ்டாலின் 11 மணி அளவில் முதல்வராக பொறுப்பேற்பார். அடுத்து 11.05 மணிக்கெல்லாம், வண்டியில் மணல் அள்ள, ஆற்றுக்கு எல்லோரும் செல்லலாம், அதை எந்த எந்த அதிகாரிகளும் தடுக்க மாட்டார்கள்… தடுத்தால் அந்த அதிகாரிகள் இருக்க மாட்டார்கள்… என்று பேசிய பேச்சும், அதை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய பேச்சும் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது திமுக.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories