ஆன்லைன் கல்வியில் இந்தியாவுக்கு பாராட்டு!

online teaching
online teaching

கொரோனா ஊரடங்கு காலத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக கல்வி கற்பிப்பதில், இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா ஊரடங்கின் போது, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், ஆய்வறிக்கை சமர்பித்துள்ளது.

இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கல்வி நிபுணர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களின் கருத்துக்களை பெற்று, இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் உள்ள, 170 கோடி மாணவர்கள், ஒரு ஆண்டாக ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கும் நிலை உள்ளது. இந்த புதிய முறை கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எப்படி தங்களை தயார் செய்து கொண்டனர் என்பது குறித்து ஆய்வு நடத்தினோம்.

வரும் காலத்தில், ‘டிஜிட்டல்’ கல்விமுறையில் பல புதிய பரிமாணங்கள் ஏற்படும் என்பதையும் கணித்துள்ளோம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஆன்லைன் கல்வி முறையில், 5க்கு, 3.3 புள்ளிகள் பெற்று, இந்தியா, மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது.

டிஜிட்டல் உபகரணங்கள் அனைவருக்கும் கிடைப்பதில் ஏற்றத்தாழ்வுகளும், இணையதள இணைப்பு கிடைப்பதில் சிரமங்கள் இருந்தது, குறைபாடாக கருதப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக கல்வி பயில்வது சீரழிவைத் தரும் என, 71 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர்.

டிஜிட்டல் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியது இந்திய அரசின் முக்கிய கடமை. மேலும், கிராமப்புறங்களில் இணையதள இணைப்புகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டியதும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories