கல்யாணம்னு காரணம் காட்டி… இ-பதிவு செய்ய முடியாது! அடுத்த மாவட்டங்களுக்கும் போக முடியாது! அதிர்ச்சி!

eregist
eregist

இ-பதிவு இணையதளத்திலிருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கம்!

பொது ஊரடங்கு காலத்தில், இ-பதிவு செய்து விட்டு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், அல்லது மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்காக, முந்தைய ஆட்சியில் நடைமுறையில் இருந்த இபாஸ் முறையை ரத்து செய்துவிட்டு, இ-ரெஜிஸ்ட்ரேஷன் எனும் வகையில், இ-பதிவு செய்தால் போதும் என்றும், அதற்கான சான்றுகளை வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதில், சில காரணங்களைச் சொல்லி, அதற்கான தகுந்த கோப்புகளை பதிவேற்றம் செய்து, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். https://eregister.tnega.org என்ற இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

தமிழக அரசு இரு தினங்களுக்கு முன் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில், “மாவட்டங்களுக்கு இடையில் மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுகிறது. மாறாக மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணைய தளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப் படுகிறது”என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வாறு மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கான காரணங்களில், இணையதளத்திலிருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கப் பட்டிருக்கிறது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்கள் என மூன்று காரணங்கள் மட்டுமே, இ-பதிவு செய்யும் இணையதளத்தில் கொடுக்கப் பட்டிருப்பதால், இந்த மூன்று ஆப்ஷன் இல்லாமல் பதிவு செய்ய முடியாது என்பதால், அடுத்த அடுத்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வைகாசி, ஆனி மாதங்களில் தான் அதிக அளவில் சுப முஹூர்த்தங்கள் நடைபெறும். இதற்காக பலர் திருமணங்களை இந்த மாதங்களில் திட்டமிட்டு ஏற்பாடு செய்து வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நிலையில், குறைந்த அளவில் முக்கிய உறவினர்களை மட்டும் அழைத்து திருமணங்கள் நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், வெலைவாய்ப்பு, நேர்முகத் தேர்வு போன்றவற்றுக்கு இனி வெளி மாவட்டங்களுக்குச் செல்ல முடியாதா? அல்லது, திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்று இந்த அரசு சொல்கிறதா என்றெல்லாம் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories