தென்பாண்டி நாட்டானின் பத்திரிகை இயல் மொழிபெயர்ப்பு அனுபவம்!

stalin in assembly - 2026

படித்து முடித்த கையோடு பத்திரிகை துறையில் வேலைக்கு சேர்ந்தான் நம்ம பாண்டி.

முதல் நாளில் a state owned company என்பதை ஒரு மாநிலத்தின் நிறுவனம் என மொழிபெயர்ப்பு செய்தான்.

ஆசிரியர் அழைத்தார். இங்க பாரு பாண்டி, இந்த மாதிரி Literal translation (நேரடி மொழிபெயர்ப்பு) செய்யக் கூடாது. இங்கு State என்பது அரசை குறிக்கும். ஆகவே இதை அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்று எழுத வேண்டும் என்றார்.

அடுத்தடுத்த நாட்களிலும் பாண்டியின் தவறுகள் தொடர்ந்தன. ஆசிரியரும் அவற்றை திருத்திக் கொண்டே வந்தார்.

Magistrate of Lucknow district என்பதை லக்னௌ மாவட்ட நீதிபதி என்று பாண்டி எழுத அதை லக்னௌ மாவட்ட ஆட்சியர் என ஆசிரியர் திருத்தினார்.

Minister of State- க்கு மாநில அமைச்சர் என எழுதியபோது அதை இணை அமைச்சர் என திருத்தினார் ஆசிரியர்.

அடுத்தமுறை, Secretary of defense, USA என வந்தபோது அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் என எழுதினான் பாண்டி. அதை அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் என ஆசிரியர் மாற்றியமைத்தார்.

தவறுகள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் பாண்டிக்கு சங்கடமாக இருந்தது. இனி தவறேதும் செய்ய கூடாது என மனதில் நினைத்துக் கொண்டான்.

இருப்பினும், President of India என்பதை இந்தியாவின் அதிபர் என பாண்டி எழுத இந்த முறை ஆசிரியர் கடுமையாக திட்டி விட்டார். இந்தியாவுல எங்கப்பா அதிபர் இருக்காரு? இந்திய குடியரசுத் தலைவர் என்று எழுதனும் என்றார் அதட்டலாக.

என்ன இருந்தாலும் பாண்டியின் தவறுகள் குறையவே இல்லை.
First Lady of India என்பதை இந்தியாவின் முதல் பெண் என்று பாண்டி எழுத அதை குடியரசுத்தலைவரின் மனைவி என்று ஆசிரியர் திருத்தினார்.

பாண்டிக்கு சலித்துவிட்டது. இந்த மொழிபெயர்ப்பு பிரிவே தனக்கு வேண்டாமென்று ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டான்.

சரி நீ நாளைக்கு சட்டசபைக்கு போ, அங்க முதல்வர் முக்கியமான விசயங்களை பேசுவார். அவற்றை கவனமாக குறிப்பெடுத்து வா என்றார் ஆசிரியர்.

அடுத்த நாள் சட்டசபையில் இருந்து நேராக அலுவலகத்திற்கு திரும்பிய பாண்டி, சற்று பதட்டத்துடன் கேட்டான், ஆசிரியரே! Union of India என்றால் என்ன?

டாட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories