December 6, 2025, 5:38 AM
24.9 C
Chennai

ஏழை மாணவிக்கு படிக்க உதவி! 12 மாம்பழத்தை ரூ.1.20 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்!

thulasi - 2025

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக மாம்பழங்களை விற்ற சிறுமியிடம் ஒரு டஜன் மாம்பழங்களை ரூ 1.2 லட்சத்திற்கு மும்பை தொழிலதிபர் ஒருவர் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் துளசி குமாரி (11). 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார்.

இவர் சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். பள்ளிகள் திறக்கப்படாததால் இந்த மாநிலத்திலும் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படுகின்றன.

thulasi 2 - 2025

ஆனால் துளசிகுமாரியிடம் செல்போன் வாங்க வசதியில்லை. இதனால் அவரால் ஆன்லைன் மூலம் படிக்க முடியவில்லை.

செல்போன் வாங்குவதற்காகவே தனது தந்தையுடன் சேர்ந்து துளசிகுமாரியும் மாம்பழங்களை விற்பனை செய்து வந்தார். சிறுமியின் நிலை குறித்து மும்பை தொழிலதிபர் அமேயா ஹேட்டேவுக்கு தெரியவந்தது.

இதையடுத்து நேராக சம்பவ இடத்திற்கு வந்த அமேயா சிறுமியிடம் இருந்து 12 மாம்பழங்களை ரூ 1.2 லட்சத்திற்கு வாங்கினார்.

அதாவது ஒரு மாம்பழம் 10 ஆயிரம் வீதத்திற்கு வாங்கினார். பின்னர் அதற்கான பணத்தை சிறுமியின் தந்தையின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்தார்.

அது மட்டுமில்லை ரூ 13 ஆயிரத்திற்கு செல்போனையும் வாங்கிக் கொடுத்த அமேயா, அந்த சிறுமிக்கு ஆண்டுக்கான இன்டர்நெட் ரீசார்ஜ் வசதியையும் செலுத்திவிட்டார்.

பெண்கள் படிப்பதற்கு எந்தவித தடையும் ஏற்படக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அமேயா தெரிவித்தார்.

துளசி கடுமையாக உழைக்கக் கூடிய மாணவி. என் உதவியால் அவர் தனது கல்வியை முடித்தால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு தேவை உதவிகளை செய்ய நாங்கள் இருக்கிறோம் என்றார் அமேயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories