இருக்கும் இடத்திற்கே தடுப்பூசி! மொபைல் தடுப்பூசி வாகனம்!

Mobile vaccine van - 2026

தடுப்பூசி போடும் நடமாடும் வாகனம் ஒன்றை கலெக்டர் கொடி காட்டி துவங்கி வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கொடி காட்டி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து கலெக்டர் மா.ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது.

அதன்படி மாவட்டத்தில் தடுப்பு பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்கள் மற்றும் இணைநோய் இருப்பவர்களுக்கும் தடுப்புசி செலுத்தப்பட்டு கொரோனா முற்றிலும் தடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே மாவட்டம் முழுவதிலும் தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற பகுதிகளில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான அங்காடிகள், வழிபாட்டு தலங்களில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஆகவே முதற்கட்டமாக இந்த மாவட்ட நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி, பழ வியாபாரிகளும், பொதுமக்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்துமாறு கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, இணை இயக்குனர் ஜீவா, துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories