அரியலூரில் ஒற்றைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர், கடந்த பத்தாண்டுகளாக கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஆடி முதல் வெள்ளிக் கிழமை அன்றறு சிவகுருநாதன் வளர்த்து வந்த ஆடு இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. அதில், நெற்றியில் ஒற்றைக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியந்த ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.