அதிர்ஷ்டம்னா இதான்… கிணறு தோண்டும் போது கிடைத்த நீலக்கல்… மதிப்பு ரூ.175 கோடி!

stone in well - 2026

வீட்டுக் கொல்லையில் கிணறு தோண்டும்போது ரூ175 கோடி மதிப்புள்ள நீலக்கல் கிடைத்தது. அதிர்ஷ்டம் என்றால் இதுதான்…

ஒரு பெரிய கல்லில் பல சின்னச் சின்ன இந்திரநீல கற்கள் இருந்தன. இதனை நிபுணர்கள் சபையர் கிளஸ்டர் (நீல மணிக் கொத்து) என்றழைக்கிறார்கள்.

இந்த நீலக்கல் 510 கிலோ (2.5 மில்லியன் கேரட்டுகள்) எடையுள்ளது.

உலகிலேயே இப்போது வரை கிடைத்த நீல கற்களில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு வெளிமார்க்கெட்டில் சுமார் 745 கோடி ரூபாய்கள் (100 மில்லியன் டாலர்கள்) இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

இது எங்கு… எவ்வாறு கிடைத்தது என்று பார்த்தால்… ஸ்ரீலங்காவில் மணிகளும் ரத்தினங்களும் அதிகமாக கிடைக்கும் இடமான இரத்தினபுரியில் உள்ள ஒரு ரத்தின வியாபாரியின் வீட்டுக் கொல்லையில் கிடைத்தது. இதற்கு எதிர்பாராமல் கிடைத்த நீலக்கல் (செரெண்டிபிடி சஃபையர்) என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

பூமியின் அடியில் அரிதான கற்கள் இருப்பதாக தோன்றுகிறது என்று என்று கிணறு தோண்டிய மனிதர் எங்களை எச்சரிக்கை செய்தார். ஆழமாகத் தோண்டும் போது இந்த நீலமணி வெளிப்பட்டது என்று அதன் உரிமையாளர் கமாகே தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முழுபெயர் விவரங்களும் கூறப்படவில்லை.

ரத்தின வியாபாரி கமாகே இந்த கல் கிடைத்த உடனே அரசாங்க அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரிவித்தார். இந்தக் கல்லை சுத்தம் செய்து அதன் மதிப்பை மதிப்பிடுவதற்கு ஒரு ஒருவருட காலம் பிடித்தது.

சுத்தம் செய்யும் செயலில் சில சின்னச் சின்ன கற்கள் அதிலிருந்து உதிர்ந்து விட்டன என்றும் அவை கூட அதிக மதிப்பு வாய்ந்த நீலமணிகள் என்றும் கமாகே தெரிவித்தார்.

ரத்னபுரியில் இதற்கு முன்பு கூட அநேக மதிப்பு வாய்ந்த ரத்தினங்களும், கற்களும் வெளிப்பட்டுள்ளன. இந்திர நீலக் கற்கள் மற்றும் பிற மிக விலை மதிப்புள்ள ரத்னங்கள் ஏற்றுமதியில் ஸ்ரீலங்கா முதல் வரிசையில் உள்ளது.

இத்தனை பெரிய ரத்தினக் கல்லை நான் எப்போதும் பார்த்ததில்லை. இது சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கும் என்று பிரபல ஜெம்மாலஜிஸ்ட் டாக்டர் காமினி ஜோயிசா தெரிவித்தார்.

ஆனால் அதில் இருக்கும் கற்கள் எல்லாமே மிக தரம் வாய்ந்தவையாக இல்லாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் அபிப்பிராய படுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories