வைரல் வீடியோ: கணவர் சேற்றுக் குழியில் விழுந்ததைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த மனைவி!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

husband skid on mud - 2026

ஈரமான தரையிலோ சேற்றிலோ நடக்கும்போது காலைப் பார்த்து வைக்க வேண்டும். சரியாக கவனிக்காமல் ஒரு அடி முன் வைத்தாலும் கூட கால் வழுக்கி விழ வேண்டி இருக்கும் அல்லவா! இது போல்தான் ஒரு மனிதர் சேற்றில் நடந்து ஒரேடியாக சில செகண்டுகள் காணாமல் போனார். சேறு என்று எண்ணி ஒரு பெரிய பள்ளத்தில் கால் வைத்ததால் முழுவதும் மூழ்கிப்போனார்.

அவருக்கு உதவி செய்ய வேண்டிய மனைவி இதையெல்லாம் வீடியோ எடுத்தபடியே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ நெட்டுலகில் வைரலாக மாறி வருவதால் நெட்டிசன்கள் கூட வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர்.

விவரம் என்னவென்றால்… பிரிட்டிஷ் டூரிஸ்ட் மார்ட்டின் லூயிஸ் தன் மனைவி ரேச்சலோடு சேர்ந்து மாலத்தீவு சுற்றுப் பயணத்திற்கு சென்றார். அங்கு வியூவாமுலா என்ற இடத்தில் சாலை வழியே செல்லாமல் ஷார்ட்கட் வழியில் செல்லலாம் என்று மனைவி அறிவுரை கூறினார். குறுக்கு வழியில் இவர்கள் ஒரு சேறு நிரைந்த இடத்தை தாண்ட வேண்டி வந்தது. அதனால் அவர் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு பாண்ட் நனையாமல் ஜாக்கிரதையாக சேற்றைக் கடப்பதற்கு காலை முன்னால் வைத்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஒரு அடி முன்னால் வைத்ததும் கால் வழுக்கி உடனே சேற்றுக் குழியில் முழ்கி காணாமல் போய் விட்டார். சேற்றில் விழுந்த உடனே மார்ட்டின் சில செகண்டுகள் வரை வெளியில் வரவில்லை. ஆனால் அவருடைய மனைவி அவருக்கு கை கொடுத்து உதவி செய்யாமல் வீடியோ எடுத்துக்கொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாமல் கணவர் விழுந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். வெளியில் வந்தவருக்கு மிகவும் கோபம் வந்து, “என்னோடு பேசாதே!” என்றார் மனைவியிடம்.

இந்த விஷயத்தை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். இந்த வீடியோ இதுவரை 28 மில்லியன் வ்யூவ்ஸ் பெற்றுள்ளது.

அதன்பிறகு மார்ட்டின் தன் அனுபவத்தை ஷேர் செய்து, “நாங்கள் தற்போது மாலத்தீவில் உள்ளோம். என் மனைவி ஒரு இடத்திற்கு செல்வதற்காக குறுக்கு வழி இருக்கிறது என்று கூறி இவ்வாறு அழைத்து வந்தாள். சேற்றில் நடந்தால் என் கால்கள் நனைந்து போகும் என்று எனக்கு தெரியும். என் உடைகளின் ஓரம் கூட வீணாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் ஆடை நனையாமல் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

ஒரு அடி எடுத்து வைத்த உடனே சேற்றில் ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டேன். சேற்றில் முழுவதுமாக முழுகிப் போனதால் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகி விட்டது. நான் கீழே போய்க் கொண்டே இருந்தேன். ஒன்பதிலிருந்து பத்து அடி ஆழமான பள்ளம் அது. ஆனால் நான் பயப்படவில்லை. உடனே நீரிலிருந்து எம்பி வெளியில் வந்தேன்.

ஆனால் என் மனைவி 10 நிமிடங்கள் நிற்காமல் சிரித்துக் கொண்டே இருந்தாள். அதன்பிறகு பீச்சுக்குச் சென்று துணிகளில் பிடித்த சேற்றை அலம்பிக் கொண்டு வந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார் .

அந்த வீடியோக்களை நீங்களும் பாருங்கள்…

Related articles

Recent articles

spot_img