மலச்சிக்கலுக்கு மருந்துன்னு ஈல் மீனை உள்ள விட்டு… வாழ்க்கையே சிக்கலாகிப் போன விபரீதம்!

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation3
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation3

விபரீத வைத்தியம்… மலத்துவாரத்திற்குள் ஈல் மீன். அதன்பின் என்னவாயிற்று என்றால்…

தற்போது நிறைய பேர் நீண்டகால மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு பலவித மருத்துவ சிகிச்சைகளையும் முயன்று வருகிறார்கள்.

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பைத்தியக்கார வேலை செய்தார். சுமார் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு ஈல் மீனை தன் மலத்துவாரத்திற்குள் செலுத்திக் கொண்டார். ஆனால் அந்த மீன் மலத்துவாரத்தில் இருந்து மேலே நீந்திச் சென்று அவருடைய வயிற்றுக்குள் பிரவேசித்தது. அதனால் தீவிரமான வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவருடைய வயிற்றில் இருந்து உயிரோடு இருந்த மீனை வெளியே எடுத்தனர்.

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation1
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation1

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் சீனாவில் உள்ள ஜிங்ஹுவாவில் நடந்தது. நீண்டகாலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த ஒருவர் தன் பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு கிராமங்களில் பழங்காலத்திலிருந்து செய்து வந்த ஒரு நாட்டு வைத்தியத்தை முயற்சித்தார். இது நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்று நம்பினர்.

20 சென்டிமீட்டர் நீளமுள்ள ஈல் மீனைப் பிடித்து வந்து உயிரோடு மலத்துவாரத்திற்குள் செலுத்திக் கொண்டார். ஆனால் அந்த மீன் மலக் குடலுக்குள் சென்று அங்கு ஓட்டையிட்டு வயிற்றுக்குள் நுழைந்தது. அதன் விளைவாக மென்மையான பெருங்குடலில் ஓட்டை விழுந்து அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நரக வேதனையை அனுபவித்தார்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

மருத்துவமனைக்கு சென்றால் தன் மானம் போய்விடும் என்று எண்ணி அந்த பயங்கரமான வலியையும் பொறுத்து பார்த்தார். ஆனால் வலி மிகவும் அதிகமாகி பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவர்கள் மிகவும் கவனமாக ஆபரேஷன் செய்து அவர் உயிரைக் காப்பாற்றினர்.

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation

இந்த சம்பவம் குறித்து ஆபரேஷன் செய்த டாக்டர் மீடியாவோடு உரையாடினார். பாதிக்கப்பட்டவரின் பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியா வயிற்றுக்குள் சேர்ந்துவிட்டால் ஹிமோலைசிஸ் என்னும் நோய் ஏற்பட்டிருக்கும் என்று எச்சரித்தார். ஹிமோலைசிஸ் நோய் ஏற்பட்டால் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்று அவர் கூறினார்.

chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation2
chinese man inserted a 20 cm eel into his rectum to releive constipation2

இதற்கு முன்பே கூட 50 வயது சைனீஸ் மனிதர் ஒருவர் மலச்சிக்கலிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு மலத்துவாரத்தில் ஈல் மீனை செலுத்திக் கொண்டார். அந்த மீன் வயிற்றுக்குள் நீந்திச் சென்றதால் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது.

அதனால் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். மிக கஷ்டப்பட்டு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அவரை காப்பாற்றினர். கொஞ்சம் தாமதமாகி இருந்தால் அவருடைய உயிர் போயிருக்கும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

மக்கள் ஆபத்தான நாட்டு வைத்தியங்களை நம்பி உயிருக்கு உலை வைத்துக் கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories