அட்டகாச சுற்றுலா: சொகுசு கப்பலில் பயணம் செல்ல தயாரா?

ship
ship

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனம் தற்போது சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கான வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் நீர்வழி தடங்களில் சொகுசுக் கப்பலில் சுற்றுலா செல்வதற்கு இனி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக இந்நிறுவனம் கார்டெலியா குரூயிஸஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பயணிகள் கப்பல் போக்குவரத்தில் கார்டெலியா குரூயிஸஸ் நிறுவனம் பிரபலமானது. இந்தியாவில் இத்தகைய சொகுசு கப்பலில் பயணிப்பதற்கு முதல் முறையாக ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா கால கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பிறகு வழக்கமான முறையில் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இத்தகைய முன்பதிவுகளை மேற்கொள்ள இது வழி ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் சொகுசுக் கப்பல் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் பயணிகள் கப்பலில் கோவா,டையூ, கொச்சி, லட்சத் தீவுகள், இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மும்பை – கோவா, மும்பை – டையூ, மும்பை கடல் பகுதி ஆகியவை 2 இரவுகளைக் கொண்ட பயணமாகும். கொச்சி- லட்சத் தீவுகள் பயணமானது 3 இரவுகளைக் கொண்டது. மும்பை, லட்சத் தீவுகள் கடல் பகுதியில் மட்டும் நான்கு இரவுகளைக் கழிப்பதற்கான பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடல் பகுதி பயணத்தில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுக்கு கார்டெலியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. கப்பலிலேயே நீச்சல் குளம், மதுபான பிரிவு, திரையரங்கம், குழந்தைகள் விளையாடும் பகுதி, உடற்பயிற்சி கூடம் ஆகிய வசதிகளை பயணிகள் அனுபவிக்கலாம்.

முதல் கட்டமாக கோவா, டையூ, லட்சத் தீவுகள், கொச்சி மற்றும் இலங்கை வரையிலான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மும்பையிலிருந்து பயணத்தைத் தொடரலாம்.

அடுத்த ஆண்டு மே மாதம் சென்னையிலிருந்து கப்பல் பயணப் போக்குவரத்து தொடங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories