ஆன்லைன் மூலம் ரேஷன் அட்டையை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.
மத்திய அரசின் “One Nation One Ration Card’ திட்டத்தின் கீழ், ஒருவர் குறைந்த விலையில் உணவு பெறுவதை விடுத்து ரேஷன் கார்டிலிருந்து பல நன்மைகளைப் பெறலாம். ரேஷன் கார்டுக்கு லட்சக்கணக்கானோர் பதிவு செய்துள்ளனர், மேலும் பலர் அதை புதுப்பித்துள்ளனர்.
இதனால், உங்கள் ஆதார் எண்ணுடன் உங்கள் ரேஷன் அட்டையை இணைத்தால், நீங்கள் அதிக நன்மைகளைப் பெறலாம். இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலிருந்தும் நீங்கள் ரேஷன் பொருள் பெறலாம்.
உங்கள் ரேஷனை அட்டையை ஆதார் உடன் இணைத்தல்;
முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் Start Now என்பதைக் தேர்வு செய்யவும். அடுத்து புதிய பக்கம் தோன்றியவுடன், உங்கள் முகவரி, மாநிலம், தொலைபேசி எண் போன்ற உங்கள் விவரங்களை பூர்த்திசெய்யவும். பின்னர் Ration Card Benefit’ விருப்பத்தை கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
அதை நிரப்பிய பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள். திரையில் தோன்றும் பக்கத்தில் OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை நிறைவு செய்தியைப் பெறுவீர்கள்.. இந்த செயல்முறை முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு உங்கள் ஆதார் உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும். இந்த செயல்முறையின் மூலம் நீங்கள் இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் பயன் அடையலாம்.