குழியில் விழுந்த குட்டியானை! மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறையினர்!

elephant 1
elephant 1

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி வனப் பகுதியில் தனது குடும்பத்திலிருந்து பிரிந்த குட்டி யானையை தாயுடன் சோக்கும் பணியில் வனத் துறையினர் வெற்றி கண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து தவறி அங்குள்ள குழியில் விழுந்துள்ளது. பின்னர் கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் அந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டன.

இதனைப் பாா்த்த வனத் துறையினர் குழியில் விழுந்த குட்டி யானையை மீட்டு பாதுகாப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மீண்டும் தாயுடன் சோக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்த விடியோவை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், வனத்துறையினர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக பிரிந்துச் சென்ற குட்டி யானை அதன் குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டது. வனத்துறையினருக்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

தனது தாயைப் பார்த்ததும் அந்தக் குட்டி யானை ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டது. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு முறை கத்திவிட்டு, ஓடிச் சென்று தனது தாயுடன் சேர்ந்து கொண்டது. தனது தாயை அடையும் போது அது உற்சாகக் களிப்பில் பிளிரியது.

இப்பணியில் ஈடுபட்ட சச்சின், வெங்கடேஷ் பிரபு, பிரசாத், விஜய், ஜார்ஜ் பிரவீன்சன், தம்பா குமார், அனீஷ், குமார், பந்தலுர் ஏபிடபிள்யு குழுவினருக்கு பாராட்டுக்கள் என்றும் சுப்ரியா சாஹு கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories