December 6, 2025, 8:18 AM
23.8 C
Chennai

நடுக்கடலில் உயிருக்கு போராடிய நாய்! குதித்து காப்பாற்றியவருக்கு குவியும் பாராட்டு!

dog 1
dog 1

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் போர்ட் லாடர்டெய்ல் என்ற கடற்கரை உள்ளது.

அங்கு ஜக்கேப் டூடுயிட் என்பவர் தனது நண்பர்களுடன் நேற்றைய தினம் படகில் உல்லாசமாக பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கடலில் நாய்க்குட்டி ஒன்று கடலில் தவியாய் தவித்து தனியாக தத்தளித்துக் கொண்டிருந்தது.

நாய்க்குட்டியின் தவிப்பைக் கண்ட ஜக்கேப் மனம் தாங்காமல் உடனடியாக கடலில் குதித்தார். பின்னர் கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டெடுத்து ஒருவழியாக படகிற்குள் கொண்டு வந்து சேர்த்தார்.

dog 2
dog 2

நீரில் நீண்ட நேரம் இருந்ததால் நாய்க்குட்டி குளிரில் நடுங்கியது. உடனே ஜக்கேப்பின் நண்பர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டியை தூக்கி ஒரு துணியை வைத்து அதன் உடலை துவட்டி விட்டனர் .

இந்த நாய்க்குட்டி யாருடையதாக இருக்கும்? அந்த நாய்க்குட்டி எப்படி நடுக்கடலுக்கு வந்திருக்கும்? என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை.

அதனால் நாய்க்குட்டி குறித்த தகவலினை அறிய அது சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த நாய்க்குட்டியின் கழுத்தில் ஒரு பட்டை அணியப்பட்டு இருந்தது.

அதில் நாய்க்குட்டியின் உரிமையாளர் யார் என்பது குறித்து விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனை அவரை தொடர்பு கொண்ட ஜேக்கப் உங்களது செல்ல நாய்க்குட்டியை நாங்கள் மீட்டு பத்திரமாக வைத்திருக்கிறோம் என்ற தகவலை நாயின் உரிமையாளரிடம் கூறினார்.

dog 2
dog 2

உரிமையாளரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து ஜக்கேப் நாய்க்குட்டியுடன் படகில் கரைக்கு திரும்பினார். பின்னர்,உரிமையாளரிடம் ஜேக்கப் நாய்க்குட்டியை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு,நாய்க்குட்டி எப்படி நடுகடலுக்குள் மாட்டிக்கொண்டது என்பது குறித்து கேட்டறிந்தார்.

அதாவது உரிமையாளர் தனது குடும்பத்துடன் நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு படகில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நாய்க்குட்டி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளது.

இதனை படகில் இருந்த யாரும் கவனிக்கவில்லை.படகில் பயணித்த உற்சாகத்தில் நாய்க்குட்டியின் மீது கவனம் செலுத்த குடும்பத்தினர் மறந்துவிட்டனர்.

கரை திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்தபிறகும் நாயுக்குட்டி இருக்கிறதா என்பதை கவனிக்கவில்லை.ஜேக்கப்பின் அழைப்பு வந்த பிறகு நாய்க்குட்டி காணவில்லை என்பதும், அது இத்தகைய இன்னல்களை எதிர்கொண்டுள்ளது என்பதும் இவர்களுக்கு தெரியவந்துள்ளது.

மேலும், ஜேக்கப் கடலில் தவித்த நாய்க்குட்டியை கடலில் அசால்டாக குதித்து மீட்டெடுத்ததை அவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைதளத்தில் பதிவேற்றினர்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்ஙளில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ஜக்கேப்புக்கு பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories